ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை..4 ஆயிரம் கோடியில் தொழிற்சாலையை தொடங்கிவைத்த முதலமைச்சர்.!
edappadi palaniswami open ceat tyre factor sriperumbathur
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் டயர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் என்ற கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இந்த தொழிற்ச்சாலையில் பத்து ஆண்டுகளுக்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்து பேசியதாவது, வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருவதாகவும், இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது எனவும் இந்தியாவில் 40% டயர்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது முதலமைச்சர் பேசினார்.
English Summary
edappadi palaniswami open ceat tyre factor sriperumbathur