ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் புதிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!
airtel vodafone new announcement
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 2,250,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 154,249 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 571,996 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முதற்கட்டமாக 21 நாட்களுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையாததால், நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில், ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வர்த்தக நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பிரீபெய்ட் சிம் கார்டுகளுக்கான வேலிடிட்டி காலம் செல்போன் நிறுவனங்கள் நீட்டித்துள்ளது. ஏர்செல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் மே 3-ம் தேதி வரை 12 கோடி வாடிக்கையாளர்கள் வேலிடிட்டி காலத்தை நீட்டித்து உள்ளது.
English Summary
airtel vodafone new announcement