முதலிரவு என்பதும் முதல் தாம்பத்திய அனுபவம் என்பது மறக்க முடியாத ஓர் உன்னதமான நிகழ்வாகும். கணவனின் கேள்விகளுக்கு மனைவி முகத்தில் வெட்கம் மட்டும் தான் இருக்கும். வெட்கத்தையும் தவிர்த்து., அடுத்து நடக்கப்போகும் போருக்கு பதட்டத்துடன் தயாராகி., கணவனின் கேள்விக்கு திணறி திணறி பதில் கூறி., காலையில் சந்திக்கும் நண்பர்கள் - குடும்ப உறுப்பினர்கள் என அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தோற்றுவிடுவாள்...
திருமணம் முடிந்து முதலிரவுக்கு முன்னர் வரை வெட்கத்தாலும்., அச்சத்தாலும்., நாணத்தாலும் மறைத்து வைத்திருந்த தன்னுடலை முழுவதுமாக துணைக்கு தர தயாராகி., பாசத்தின் ஈரத்தில் வளர்ந்த மங்கை., காதல் நிலத்தில் வேர் பயிரை வாங்கி வளரப்போகும் இன்பத்தையும்., பயத்தையும் தன்னுள்ளே கொண்டிருப்பாள். கணவனின் மனம் கோணாது நடந்து கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்திருப்பார்கள். பருவமடைந்ததில் இருந்து தேங்கியிருக்கும் நாண சுவர்கள் அனைத்தும் அணைகட்டி பாதுகாத்த அவள்., அணையை உடைத்து காமக்கடலை வெளியேற்றும் சமயத்தில்., அன்பின் வெப்பத்தில் காம பேரலையை ரசித்து., இன்பத்திற்கு மத்தியில் முதல் தாம்பத்யத்திற்கான பயத்தையும் கொண்டிருப்பாள்.
இரண்டு உள்ளமும் ஓர் நேரத்தில் பயமடைந்து., பின்னர் தயாராகி பயத்தை உடைத்த நேரத்தில் வழங்கப்படும் ஒரு முத்தத்தால் இருகரமும் இருக்க தழுவி., இதயத்தின் வேகம் எபபோதும் இல்லாத அளவிற்கு பதட்டத்தை உண்டாக்கி., கற்பனை கனவை மெய்யாக்கும் நிகழ்வில் இரு உயிரும் ஈடுபடும். இந்த கற்பனை கனவு நல்ல விதத்தில் இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. மாறாக ஒரு துணையின் ஆசை இயற்கைக்கு முரணாக பழக்கவழக்கத்தால் அசாதாரண அல்லது ஆபத்தான தாம்பத்திய ஆசையாக இருந்தால் முதலிரவு கொண்டாட்டம் - இரணகள கதறலை கொண்டிருக்கும் என்று கலவிக்கான மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுக்கின்றனர்.
தம்பதிகள் முதலில் இணைந்து உணர்ச்சிகள் அதிகரித்து., அன்பின் வெளிப்பாடாக வெக்கம்மும் இருக்கும் சமயத்தில் பேசியிருக்க வேண்டும். தாம்பத்திய வாழ்க்கைக்கான குழப்பமும்., அசாதாரண அல்லது ஆபத்தான தாம்பத்திய முறையும் தாம்பத்திய பயத்தை விதைத்துவிடும். உயிரினங்களின் வளர்ச்சி இனப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. காமம் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகிறது. பசி மற்றும் தாகத்தை போன்று காமமும் அடிப்படை தேவை.. இந்த காமம் உடலோடு சம்பந்தப்பட்டதல்ல மாறாக மனமும் சேர்ந்து இயங்கும் பட்சத்திலேயே தாம்பத்திய இன்பம் அதிகரிக்கும்.
தாம்பத்யமானது சரியான பந்தத்தில்., சரியான துணையுடன்., தகுந்த சூழலில் நிகழ வேண்டும். ஆணுடலின் தன்மை மற்றும் துணையின் எதிர்பார்ப்பு., தாம்பத்திய தருணத்தில் ஆணின் மனநிலை மற்றும் புணர்ச்சி நிலை குறித்து பெண் அறிந்து கொள்வது., தாம்பத்திய நேரத்தில் தன்னம்பிக்கையுடன் பெண் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். தனது துணையுடன் இருப்பது அல்லது முதலிரவு குறித்து பெண் அறிந்திருக்க வேண்டும். இதனைப்போன்று ஆணும் பெண்ணின் உடல் அமைப்பு., புணர்ச்சி நிலை மற்றும் தனிமையில் சந்திக்கும் தருணத்தில் நடந்து கொள்ளும் விதம்., தாம்பத்தியத்தில் பெண்ணின் அடுத்தகட்ட நகர்வு போன்றவை அறிந்திருக்க வேண்டும்.
தாம்பத்திய உணர்ச்சி என்பது மூளையில் உதித்து., உடலின் இறுதி வரை சென்று முடியும் செயல் ஆகும். ஆணை பொறுத்த வரையில் நான்கு தாம்பத்திய நிலைகள் உள்ளன. மூளையில் தாம்பத்திய உணர்ச்சி., ஆணின் இனப்பெருக்க உறுப்பு தாம்பத்தியத்திற்கு தயாராகுதல்., உச்சக்கட்டம் மற்றும் விந்தணுக்கள் வெளியேறுதல் என்று இருக்கிறது. இந்த நான்கு நிலையில் ஆணின் உச்சக்கட்டம் வேகமாக நடக்கும். தாம்பத்திய உணர்வு மற்றும் காம எண்ணங்கள் குறைவாக இருப்பின்., தாம்பத்திய ஆணுறுப்பு எழுச்சி பிரச்சனை., உச்சக்கட்டத்திற்கு முன்னதாகவே விந்தணு வெளியேறுதல் போன்ற சில பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை மேற்கொள்வது நல்லது.
பெண்களை பொறுத்த வரையில் தாம்பத்திய உணர்வு ஏற்படுவது., பிறப்புறுப்பு தாம்பத்தியத்திற்கு தயாராகுவது., கிளிட்டோரிஸ் எழுச்சி அடைவது., பெண்ணுறுப்பில் சுரக்கும் தாம்பத்திய திரவம் மற்றும் உச்சநிலை என்று படிநிலைகள் உள்ளது. இந்த செயல்பாடுகள் ஆணைப்போல பெண்ணிற்கு வேகமாக நடப்பதும் இல்லை. பெண்களை பொறுத்த வரையில் அதிகளவு அன்பிற்கு ஏங்குவார்கள். கணவனின் அன்பு மற்றும் அன்பான தொடுதல் போன்றவற்றால் மட்டுமே பெண்ணை தாம்பத்தியத்திற்கு தயாராக வைக்கும். பெண்ணை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் முதல் தாம்பத்தியம் அதிகளவு பயத்தை கொடுக்கும்.
இந்த பயத்தின் காரணமாக தாம்பத்திய உணர்வானது குறைவாக இருக்கும். பயத்தின் வெளிப்பாடாக பெண்ணுறுப்பானது தாம்பத்தியத்திற்கு தேவையான திரவத்தை சுரக்காமல் இருக்கும். முதலிரவை பொறுத்த வரையில் மனதால் நெருங்கிய பின்னரே., உடலளவில் தாம்பத்தியம் ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக செய்யும் நிகழ்வு பிற பிரச்சனையை ஏற்படுத்தும். இதற்கு அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் அவகாசம் வழங்குவது நல்லது. முதலிரவை பொறுத்த வரையில் அன்போடும் செயல்படுவதே வெற்றியை ஏற்படுத்தும்.
தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது வாழ்நாள் பயணத்திற்கான ஒரு துவக்கமே ஆகும். இந்த துவக்கத்தில் சில காரணத்தால் சிரமம் ஏற்பட்டால் வருத்தமடைய தேவையில்லை. மனதிற்குள் குறையை வைத்துகொண்டே இருந்தால் அது மனஅழுத்தத்தை மட்டுமே பரிசாக அளிக்கும். இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். துணையின் விருப்பத்தை இருவரும் அறிந்து அன்போடு செயல்பட வேண்டும். தாம்பத்தியம் தொடர்பாக ஆபாச வீடியோ காட்சிகளை காணுவது தாம்பத்யத்தில் நல்லதல்ல... ஏனெனில் அவ்வாறான ஆபாச விடியோக்கள் அனைத்தும் வணிகரீதியாக எடுக்கப்படும் படங்கள் ஆகும். ஆபாச படத்தில் செயல்படுத்தப்பட்ட புங்ரச்சி நிலையை பார்த்து., துணையை வற்புறுத்துவது தாம்பத்திய கசப்பை ஏற்படுத்தி., வெறுப்பை அளித்துவிடும்.
தாம்பத்தியத்திற்கு முன்னதாகவும் - பின்னதாவும் பிறப்புறுப்பு சுத்தம் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வது நல்லது. திருமணத்திற்கு முன்னதாக இருக்கும் கைப்பழக்கம் மற்றும் சுய இன்பம் போன்றவை தாம்பத்தியத்தை பாதிக்காது. இதனை மனதில் வைத்து தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபட தேவையில்லை. பெண்ணின் பிறப்புறுப்பானது முதலில் ஆணுறுப்பு நுழைவதற்கு இடமளிக்காமல் போகலாம். இதனைப்போன்று ஆணுறுப்பும் தேவையான அளவு விறைப்புத்தன்மை பெறுவதில் சிக்கலையும் ஏற்படுத்தலாம்.
தாம்பத்தியத்தில் பெண்ணுறுப்பானது உடன்படாமல் போகும் செயலுக்கு ஆங்கிலத்தில் Vaginismus என்று அழைக்கிறோம். தாம்பத்தியத்தின் போது காம உணர்வு ஏற்படாமல் இருத்தல்., அதிகளவு பயம் மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவின் விரக்தி., கருப்பை நீர்க்கட்டி மற்றும் ஆண் மீதான வெறுப்பு போன்ற பலவகையான காரணம் உள்ளது. தாம்பத்தியம் என்பது வாழ்க்கைக்கான பயணத்தின் அங்கம் என்பதால்., இருவரும் தங்களின் மனதில் உள்ள குறைகளை கண்டறிந்து பேசி தீர்த்து கொள்வது அவசியம். திருமணத்திற்கு முன்னான கைப்பழக்கத்தை கொண்ட நபர்கள்., தன்னை தானே ஆண்மையற்றவன் என்று எண்ணி பெண்ணை தொடாமலேயே இருப்பதும் நிகழ்ந்துள்ளது.
மேலும்., மனைவியின் உள்ளாடையை வைத்து கைப்பழக்கம் மேற்கொள்வது., மனைவியின் ஆடையை அணிவது மற்றும் ஓரின சேர்க்கை போன்ற காரணத்தால் ஆண் பெண்ணுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளாமல்., இதனைப்போன்ற சில சின்னத்தனமான செயல்கள் செய்து திருப்தி அடைவதும் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தும் இயற்கைக்கும் முரணான ஒன்றாகும். தாம்பத்தியத்தின் போது பெண்ணிற்கு ஏதோ ஒரு தீண்டத்தகாத வகையில் அதிகளவு வலியை ஏற்படுத்தி., ஆண் திருப்தி அடையும் நிகழ்வு சேடிசம் என்று அழைக்கப்படுகிறது.
இதனைப்போன்ற பழக்கம் உள்ளவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு செயல்படுவது நல்லது. தாம்பத்தியத்தில் பெண்ணிற்கான இடம் என்பதை தர வேண்டும். பெண்களின் பிறப்புறுப்பில் இருக்கும் கன்னித்திரை ஓடும் போதோ அல்லது வேறு ஏதேனும் சந்தர்பத்திலோ கிழிந்திருக்க வாய்ப்புள்ளது. முதன் முதலாக தாம்பத்தியம் மேற்கொள்கிறேன்., எனது மனைவிக்கு கன்னித்திரையில் இருந்து இரத்தம் வரவில்லை. நீ நல்லவள் இல்லை என்று கூறி சந்தேகிப்பது நல்லதல்ல. இன்றுள்ள காலகட்டத்தில் பெண்களும் அவர்களின் உடல் மற்றும் தாம்பத்தியம் ரீதியான விஷயங்களை அறிந்துள்ளனர்.
தாம்பத்தியத்தின் போது பெண்ணின் விருப்பத்தை அறியவும் கூறவும் ஆண் சுந்தந்திரத்தை அளிக்க வேண்டும். இந்த தருணத்தில் பெண்ணின் கேள்வியை கேட்டுக்கொண்டு., நடத்தையை குறைகூறுவது அர்த்தமான ஒன்றல்ல.. பெண்ணிற்கும் தனது விருப்பம் மற்றும் உணர்வை கூறுவதில் பங்கு உள்ளது. இருவரும் மனம்விட்டு பேசி ஆசை மற்றும் பிடிக்காதவை குறித்தும் அறியும் பட்சத்திலேயே பெண்ணின் உணர்வு அதிகரித்து இன்பத்தை அடைய முடியும். தாம்பத்தியத்தில் முதலிரவு அறைக்குள் வந்தவுடன் அந்த சூழல் அவளுக்கு பிடித்திருக்கிறதா? மகிழ்வுடன் இருக்கிறாளா? என்று அறிந்துகொள்வது அவசியம். மேலும்., திருமணத்திற்கு முன்னதாக ஏற்படும் பயத்திலேயே பல நாள் தூக்கமில்லாமல் இருந்திருப்பாள்..
திருமண நிகழ்ச்சியின் போது ஏற்படும் உடல் களைப்பினால் பெரும்பாலும் தூங்குவதற்கே மனம் விரும்பும்... இதனால் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து., பின்னர் நன்றாக ஓய்வெடுக்க அனுமதியுங்கள்.. இதற்கு பின் பிடித்தமான சூழல் மற்றும் நல்ல மனநிலையுடன் தாம்பத்தியத்தை துவங்குவோம் என்று அன்பளிக்கும் வகையில் பேசினால் நன்மை... தாம்பத்திய விளையாட்டுகளை விளையாட ஆவலா? என்றும் கேட்டுக்கொள்ளலாம். தாம்பத்தியத்தின் போது பெண்ணிற்கு வலி கண்டிப்பாக ஏற்படும். அவ்வாறு வலி ஏற்படும் பட்சத்தில் பெண்ணால் இயலாமல் போதும் என்று கூறிவிட்டால் சற்று விளையாட்டில் ஈடுபட்டு கொள்ளலாம். தேகத்தில் முத்தத்தை பதியவைக்கலாம். தாம்பத்தியத்தில் இருவரும் மனமறிந்து அன்பு., காதல் மற்றும் பாசத்தை கடந்து செயல்பட்டு காம வெள்ளத்தில் மிதக்கலாம்...
Tamil online news Today News in Tamil
English Summary
lot of love caring and guilty feelings of first night