அன்பு... அன்பை வெளிப்படுத்தும் முக்கிய அங்கமாக இருப்பது முத்தம். தாம்பத்தியத்தில் தம்பதிகளுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள் என்பது மிகவும் முக்கியமானது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பு-பாசம்-காதல்-ஏக்கம் என அனைத்தையும் நிவர்த்தி செய்வதும்., தாம்பத்திய முன் விளையாட்டுகளை துவங்கும் சமயத்தில் பெரிதும் உதவி செய்வது முத்தம். இந்த முத்தத்திற்கு ஏங்கிய பல பெண்கள் இன்றளவிலும் இருந்து வருகின்றனர். முத்தத்தின் அருமை பலருக்கு தெரிவதில்லை எனபதே பெரும் சோகமாக உள்ளது.
இன்றுள்ள பல தம்பதிகளுக்குள் தாம்பத்தியத்தின் போது முத்தம் இல்லாத தாம்பத்தியமாகவே அனைத்தும் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. மேலும் சில தம்பதிகளுக்கு தாம்பத்தியம் நடைபெறாவிட்டாலும்., முத்தத்திற்கு ஏங்கியே இருக்கின்றனர். முத்தங்கள் இல்லாத தாம்பத்தியமும்., தாம்பத்தியத்தில் முத்தம் இல்லாததும் பெரும் பிரச்சனையே... அந்த வகையில்., தாம்பத்தியத்தில் முத்தங்கள் எதற்காக? எவ்வுளவு முக்கியம்? என்பது குறித்து அறிந்து கொள்வது கட்டாயம் அவசியம்.
குழந்தைகள் பிறந்த பின்னர் தனது தாயாரிடம் முதல் முத்தத்தை குறிப்பிட்ட நாட்கள் வரை பெறுகிறது. பின்னர் பருவம் அடைந்து., காதல் வந்த பின்னர் முத்தம் என்பது எல்லையற்ற இன்பமாக வருகிறது. காதலர்களுக்குள் முதல் முத்தம் கொடுக்கவும்., பிறவும் எத்துனை தவங்கள் செய்து காத்திருந்தோம் என்பது., அவர்களின் மனதிற்குள் புதைந்திருக்கும் முத்துக்களை போன்றதாகும். முத்தங்கள் குறித்து நினைக்கும் போதும்., அதனை துணையுடன் செயல்படுத்தும் போதும் மூலையில் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் மனதிற்கு ஆறுதலும்., ஆனந்தமும்., உடலுக்கு நலமும் கிடைக்கிறது.
பொதுவாக முத்தத்தை உளவியல் ரீதியாக பார்த்தால் மனஅழுத்தத்தை குறைக்க வழிவகை செய்கிறது. தம்பதிகள் தாம்பத்திய வாழ்க்கையை துவங்குவதற்கும்., இல்லற வாழ்க்கையின் பயணத்தை இனிதே ஆரம்பிக்கவும் முத்தங்கள் அருமையான உதவியை செய்கிறது. நாம் முத்தமிடும் சமயத்தில் இதயத்துடிப்பானது எகிறி துடிப்பதால்., சுவாசிக்கும் வேகமும் வெகுவாக அதிகரித்து., ஆழமான நுரையீரலின் சுவாசிப்பு செயற்பாடை அதிகரிக்கிறது. மேலும்., உதட்டுடன் உதடு வைத்து முத்தம் பரிமாறிக்கொள்வதால்., நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
தம்பதிகளுக்குள் முத்தங்கள் என்பது அன்பின் பிணைப்பை வலுப்படுத்த பெரிதும் உதவி செய்கிறது. முத்தத்தில் துவங்கும் தமபத்தியதால் மூளையில் இருக்கும் Oxytocin என்னும் ஹார்மோனின் அளவு அதிகரித்து., தம்பதிகளுக்கு மன அமைதியை வழங்குகிறது. இதனால் நம்பிக்கையும் - அன்பும் அதிகரித்து., தாம்பத்யத்திற்கான சூழலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிறது. மேலும்., இதழோடு - இதழ் இறுக்க சேருவதால்., உடலின் கலோரிகள் விரையம் செய்யப்படுகிறது. தாம்பத்தியத்தின் போது அன்பை வெளிப்படுத்த கழுத்து., கன்னம்., இதழ் போன்ற இடங்களில் முத்தங்கள் பரிமாற வேண்டும்.
இதனால் உடலின் மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரித்து., உடலின் கலோரிகளும் விரையம் செய்யப்பட்டு உடலின் எடை குறைக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும்., முத்தமிடுதலால் உடலும் - மனதும் சாந்தமடைவதை உடனடியாக உணர இயலும். அதிகளவு இருந்தால் வேலைப்பளுவால் ஏற்படும் உடல் வலி., மன அழுத்தம்., தலைவலி மற்றும் மாதவிடாய் காலத்தின் வலிகள் போன்றவற்றிற்கு முதல் மற்றும் முக்கிய மருந்தாக முத்தம் உள்ளது. முத்தம் பரிமாறப்படும் சமயத்தில் மன அழுத்தம் மற்றும் உடலின் தேவையற்ற கொழுப்பு சத்துக்கள் தொந்தரவு சரியாகிறது. உடலின் இரத்த ஓட்டங்கள் சீராவதன் காரணமாக., தம்பதிகள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயத்திலும் முத்தங்களை பரிமாறிக்கொண்டு காதலை வளர்க்கலாம்.
காதலிக்கும் நபர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில்., அளவுக்கு அதிகமான முத்தத்தை வாரி வழங்கவும் செய்வார்கள். சிலர் முத்தங்களை அதிகளவு துணை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தம்பதிகளுக்குள் அன்பு குறையும் போது., முத்தம் வழங்குதலும் குறையும். மேலும்., இன்றளவில் இருக்கும் பல குடும்பங்களில் தாம்பத்தியம் கடமைக்காக நிறைவேற்றப்படுவது தெரியவருகிறது. முத்தங்கள் இல்லாமல் நடைபெறும் தாம்பத்தியம்., அன்பின் வறட்சியை தெளிவாக எடுத்துரைக்கிறது. முத்தங்கள் இல்லாத தாம்பத்தியம் என்பது., உடலின் இச்சைக்காக மட்டும் அரங்கேறும் தாம்பத்தியம் என்று தான் கூற வேண்டும். முத்தங்கள் முத்துக்களை போல விலைமதிக்க இயலாதவை., துணைக்கு உங்களின் பாசத்தை வெளிப்படுத்த தாறுமாறாக முத்தங்களை பொழிந்து தள்ளுங்கள்...
தம்பதிகள் முத்தங்கள் பரிமாறிக்கொள்ளும் சமயத்தில்., இருவரும் தயாராக இருக்க சில ஆலோசனைகள் உள்ளது. இனி அவை குறித்தும் நாம் காண்போம். தம்பதிகள் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும். முத்த பரிமாற்றத்தில் வாய் துர்நாற்றம் தெரியாமல் இருக்க., பற்களை துலக்கியிருக்க வேண்டும். மேலும்., துணைக்கு பிடித்தமான உடை மற்றும் நறுமண திரவியம்., காதல் உணர்வுடன் இருக்க வேண்டும். முத்தங்களை பரிமாறிக்கொள்வதற்கு முன்னதாக வார்த்தை மற்றும் சின்ன சின்ன தொடுகை விளையாட்டு மேற்கொள்ளலாம். இதழோடு இதழ் சேர்த்து முத்தங்களை பதிக்கும் சமயத்தில்., இதமான வருடல் இன்பத்தின் அளவை அதிகரிக்கும்.
முத்தங்களின் வகைகள் சொல்லும் இன்ப கதைகள் குறித்து இனி தெரிந்து கொள்வோம்... உன்னை எண்ணியே உன்னிடம் சரணடைந்தேன்., இதழ்களில் முதல் முத்தம் தாம்பத்தியத்தின் துவக்க மற்றும் தாம்பத்திய உணர்ச்சியை திறக்கும் திறவு கோலாகும். மனைவி எதிர்பாராத நேரத்தில்., சமையலறை திட்டுப்பூனை போல சென்று கட்டியணைத்து முத்தமிடுவது அன்பின் வெளிப்பாடு ஆகும். சமையலில் சாதித்திற்கும் மனைவியை கரத்தில் முத்தமிட்டு பாராட்டுதல்., வீட்டில் உள்ள பணியை கவனிக்கும் போது., மனைவியை கட்டியணைத்து காதுகளை இதமாக வாயால் கடித்து முத்தமிடுவது இன்பத்தின் வெளிப்பாடு., வேலைகளின் காரணமாக வெளியூர் செல்லும் நிலை நேர்ந்தால்., சிலநிமிட இதழ் முத்தம் பெண்ணிற்கு பேரின்பம் ஆகும்.
தினமும் காலை முதல் மாலை வரை அளவின்றி நீங்கள் கொடுக்கும் அன்பு முத்தங்களை., தாம்பத்திய சமயத்தில் மீண்டும் அன்போடு திரும்பி உங்களின் தேவதை உங்களுக்கு தருகிறார். இதழுடன் இதழ் பதிக்கும் சமயத்தில்., கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுதல்., முத்தமிடும் தருணத்தை ரசனையாக மாற்றுகிறது. ஒரேயொரு அணைப்பில் துணையை கட்டியணைத்து முத்தமிடுதல்., நீ எப்போதும் எனக்கு வேண்டும் என்பதை பெண்ணிற்கு உணர்த்துவதாகும். அன்பின் அதிகபட்ச வெளிப்பாடாக கண்களில் இடப்படும் முத்தம்., இமைப்பொழுதிலும் உன்னை நினைத்து., உன்னை விட்டு நீங்காமல் இருக்க விரும்புகிறேன் என்பதன் அர்த்தமாகும்.
தாம்பத்தியத்தில் உச்சிமுதல் - பாதம் வரை இடப்படும் முத்தமானது., பெண்ணை தாம்பத்திய இன்பத்திற்கு தயார்படுத்தும் நிகழ்வு மற்றும் தாம்பத்திய நெருக்கத்தை அதிகப்படும் செயலாகும். தாம்பத்தியத்தின் துவக்கம் முதல் - இறுதி வரை பரிமாறப்படும் முத்தங்கள் இரட்டை இனப்த்திற்கு வழிவகை செய்கிறது. அவ்வப்போது கட்டியணைத்து இடப்படும் முத்தங்கள் முகத்தின் தசைகளை இறுக்கமடைய செய்து., இளமையை தக்கவைக்கிறது. எந்த விதமான சூழ்நிலையிலும் காதல் குறையாமல் பார்த்து கொள்கிறது. தம்பதிகள் தங்களுக்குள் ரசனையாகும் விஷயத்தை கூறி பாராட்டுங்கள். தங்களின் துணை விரும்பும் ஆடைகள் மற்றும் நறுமண பொருட்களை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம். தேனிலவு செல்லும் தம்பதிகள்., எல்லையின்றி காதலை கொண்டாடுங்கள்..
எந்த சமயத்திலும் தாம்பத்யத்திற்க்காக இரவு வரை காத்திருக்க தேவையில்லை. தம்பதிகள் கடிகாரத்தை நோக்கிக்கொண்டு இருக்காமல்., தாம்பத்திய இன்பத்திலும் - காதலிலும் அன்பை பரிமாறிக்கொண்டு இன்பமாக இருங்கள். காதலில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல்., பிடித்தமான உணவு மற்றும் கவரும் உடைகள்., மனம் மிகுந்த மலர்களோடு தாம்பத்திய இன்பத்தை அதிகரித்து கொண்டாடுங்கள். தாம்பத்திய சமய மென்மை குரல்., வியர்வை வாசனை., இறுக்க கட்டியணைக்கும் வேகம்., தாம்பத்திய உணர்ச்சியால் ஆணை மிஞ்சும் பெண்மை என எது விரும்பப்படுமோ? அனைத்தையும் ஆனந்தமாக ரசிக்கலாம். வாழ்க்கையை கொண்டாடுங்கள்......
Tamil online news Today News in Tamil
English Summary
enjoy with partner give lot of kiss