துணையின் விருப்பத்தை கூறி தாம்பத்தியத்தை துவங்குங்கள்.! இல்லற வாழ்க்கை மருத்துவமாகும் தாம்பத்தியம்.!!
during enjoy with partner know about liking things of enjoy
பொதுவாக திருமணம் முடிந்த தம்பதிகளிடம்., சில வருடத்திற்கு பின்னர் உங்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்று கேட்டால் நமக்கு பதில் வடிவேல் மற்றும் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையை போல கன்னம் சிவக்கும் அளவிற்கு அடியும்., காதில் இருந்து இரத்தம் ஊற்றும் அளவிற்கு அவதூறான வார்த்தைகளும் கேட்க வேண்டியிருக்கும்.
இந்த விஷயத்தை பொறுத்த வரையில் பெண்கள் அவர்களின் பிரச்சனைகளை பெரும்பாலும் வெளியே கூறுவதில்லை., திருமணம் முடிந்த அனைத்து தம்பதிகளும் அவர்களின் வாழ்க்கையில் இறுதி வரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இந்த விசயத்திற்கு பல காரணங்கள் உள்ள நிலையில்., தாம்பத்தியம் என்ற செயல் சரியாக இல்லாததன் காரணமாக அது வில்லனாக உருவெடுப்பதாகவும்., தாம்பத்தியத்தின் போது செய்யப்படும் தவறும் கூறப்படுகிறது.
தாம்பத்தியத்திற்கு பின்னர் பெண்கள் தங்களது துணையின் அரவணைப்பை அதிகளவு விரும்புகின்றனர். இந்த நேரத்தில் ஆண்களின் பணி முடிந்துவிட்டவுடன் எழுந்து செல்வது., அரவணைப்பு கிடைத்தாலும் பெரும் குறட்டை வெளிப்படுவது போன்ற காரணத்தால் பெண்கள் தனிமையை உணருகின்றனர். இந்த சூழலை சரி செய்வதற்கு படுக்கையில் பணியை சற்று நிதானத்துடன் மேற்கொள்ளல் வேண்டும்.
இன்று என்னதான் பல எண்ணத்துடன் ஆண்கள் வாழ்ந்து வளர்ந்து வந்தாலும்., சில ஆண்களுக்கு முத்தம் வழங்கும் நிகழ்வு கூட தெரியாது... பற்பல திரைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளிகளை பார்த்துவிட்டு., செயல்படுத்துகிறேன் என்ற பெயரில் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்களும் நடந்து கொண்டு வருகிறது. குறிப்பாக சில இடங்களில் முத்தமிடும் செயல்களை பெண்கள் விரும்புவதில்லை.
தாம்பத்தியத்தில் பெண்களின் மனநிலையை உணர்ந்து., அவர்களின் விருப்பத்தை தெரிந்து செய்யப்பட்டால்., திருமண வாழ்க்கையானது இன்பமாக இருக்கும். இன்றுள்ள பல்வேறு கட்ட பணிசூழலில் வாழ்ந்து வரும் ஆண்கள் அழுத்தம் மற்றும் கோபத்தை குறைப்பதற்கு தாம்பத்தியத்தை உபயோகம் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களை பெண்கள் அறவே வெறுக்கின்றனர்.
இந்த மனஅழுத்தத்துடன் கூடிய தாம்பத்தியமானது பெண்களுக்கு தங்களின் கணவர் மீதான வெறுப்பை அதிகரிக்க செய்கிறது. இது போன்ற மன அழுத்தங்கள் இருந்தால் அமைதியாக இருப்பதே நல்லது. தொடர்ந்து மன அழுத்தத்தால் தாம்பத்தியம் தடைபட்டால் மனைவியை கட்டியணைத்து., மனதில் இருக்கும் கோபத்தை அழுகையாக வெளிப்படுத்தி பின்னர் தாம்பத்தியத்தை இன்பத்துடன் துவங்க வேண்டும்.
பெரும்பாலான ஆண்கள் பகல் வேளைகளில் பெண்களை அடித்து துன்புறுத்தல் மற்றும் அவதூறாக பேசிவிட்டு., இரவு வந்ததும் பூனையை போல பால் குடிக்க ஆசைப்பட்டால்., அவசர அவசரமாக மனைவியிடம் கொஞ்சி சமயலறையில் நடைபெறும் தாம்பத்தியத்தில் சில ஏடாகூடமான நிகழ்வுகளும் நிகழ்ந்துவிடும். உண்மையில் பெண்களுக்கு தாம்பத்தியத்திற்கு முன்னதாக குறைந்தது ஐந்து நிமிடங்கள் தேவை., திருமணம் முடித்த புதுமண பெண்களின் விருப்பத்தை கூறுவதற்கு கூட சில நேரம் ஆண்கள் இடம் வழங்குவதில்லை என்பதே நிதர்சனம்.......
English Summary
during enjoy with partner know about liking things of enjoy