குழந்தைகள் உறங்கும் போது தம்பதிகள் தாம்பத்தியமா?..!!
Couples enjoy while the kids are sleeping
இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் அனைத்தும் தனது சந்ததியை பெருக்கும் நோக்கில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில்., திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களுக்கான எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கிலும்., தங்களின் வாழ்க்கை படிக்கு அஸ்திவாரமாய் இருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இன்றுள்ள நிலையில்., தம்பதிகள் தங்களுக்குள் குழந்தை பிறந்தவுடன் தாம்பத்தியம் பெரும் தடையாக அமைவதாக நினைக்கின்றனர். இந்த கூற்று பாதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில் குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரை தனது பெற்றோரின் அருகிலேயே உறங்கும். நாம் சற்று அசைவை ஏற்படுத்தினாலே குழந்தைகள் பதறியடித்து விழித்துக்கொள்ளும்.
இதன் காரணமாக தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக்குகிறது. இரவில் குழந்தைகள் பெரும்பாலும் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்திய பின்னரே தம்பதிகள் தாம்பத்தியத்தை துவங்குவார்கள். இந்த வகையான பயம் கொண்ட தாம்பத்தியம் பெரும் மனப்பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று கலவிக்கான மருத்துவர்கள் மற்றும் மனோ தத்துவ மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளை பொறுத்த வரையில் இரவு நேரத்தில் குழந்தைகள் உறங்கிவிட்டதாக பெற்றோருக்கு தெரிந்தாலும்., தாம்பத்திய தேடல் மற்றும் அவசரத்தின் காரணமாக தம்பதிகள் தங்களுக்குள் ஒரு எண்ணத்தை நினைத்துக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., பெரும்பாலான குழந்தைகள் சிறிய அளவிலான சத்தம் மற்றும் அசைவிற்க்கே விழித்துக்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படும்.
அவ்வாறு விழித்துக்கொண்ட குழந்தை., தாய் - தந்தையின் நடவடிக்கையை கவனித்துக்கொண்டும் இருக்கலாம். சில குழந்தைகள் தந்தை தனது தாயாரை துன்புறுத்துவதாகவும் அல்லது கொலை செய்ய முயற்சிப்பதாகவும் நினைத்துக்கொண்டு இருக்கும். இதில் குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்., அந்த பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்தாலும் தாம்பத்தியம் மீதான பயம் மற்றும் கோபம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தம்பதிகள் தங்களுக்குள் தாம்பத்தியத்தை எப்போது? எங்கு? எப்படி? துவங்க வேண்டும் என்பதை முடிந்தளவு பேசி முடிவெடுத்து செயல்படுவது நல்லது. குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைகளை காரணம் காட்டி தாம்பத்தியத்தை நிறுத்த தேவையில்லை... மேற்கூறிய எப்போது? எங்கு? எப்படி? என்ற கூற்றை தம்பதிகள் சிந்தித்து செயல்பட்டால் இல்லறம் சிறப்பாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Couples enjoy while the kids are sleeping