திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் தாம்பத்திய வெற்றியை உறுதி செய்வது அவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை பொறுத்தது. தினமும் சாப்பிடும் உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள்., புரத சத்துக்கள்., கொழுப்புகள்., வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உள்ள காய்கறிகள்., பழங்கள் மற்றும் மாமிசங்களை சாப்பிட வேண்டும்.
தாம்பத்தியத்தில் அதிகளவு இன்பத்தை பெறுவோம் என்று நினைத்து எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் உறவு நேரத்தை அதிகரிக்க கூடிய வகையில் இருக்கும் மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக சாப்பிட கூடாது. அவ்வாறு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால்., அந்த நேரத்தில் தேவையான இன்பமானது கிடைக்காமல்., ஆர்வமும் குறைகிறது.
தாம்பத்தியத்தில் எடுத்த உடனே காளை மாடு விட்டதில் பாய்ந்ததை போல பணியை துவக்க கூடாது., இனிய மனதிற்கு சுகத்தை வழங்கும் மென்மையான பாடலை கேட்டு., நிதானமாக விளையாட்டை துவங்கி பின்னர் தாம்பத்தியத்தை துவங்க வேண்டும். அதிவேகம் ஆபத்தானது என்பதை போல., பக்குவமான முறையில் எந்த விதமான சலனமும் இல்லாமல் துவங்க வேண்டும். இல்லறத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு தாம்பத்தியம் பெரும் வழிவகை செய்கிறது. இரு மனம் இணைந்து ஓருடலை உருவாக்குவதற்கு தனது பணியை துவங்குகிறது.
துணையிடம் இருக்கும் ஒப்புதலை பொறுத்து உடலை இயக்கி தாம்பத்தியத்தை இனிதே துவங்க வேண்டும். இருவருக்கும் இடையே இந்த விஷயத்தை பொறுத்த வரையில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்பத்தை அளிக்கும். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் எத்தனை முறை துணையுடன் இணைந்தாலும் ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. சிறுது ஆர்வ கோளாறில் அதிக வேகமோ அல்லது பிற ஆசையோ ஆபத்தில் முடிந்துவிடும்.
துணையின் மனம் மற்றும் உடல் ஒத்துழைக்கும் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் தாம்பத்தியத்தை மேற்கொண்டு உங்களின் இல்லறத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் வயது ஒரு தடையே கிடையாது. திருமணம் முடிந்த சில வருடங்கள் இன்பத்துடன் இருந்தோம்., இப்போது குழந்தைகள் வளர்ந்ததால் கூட இயலவில்லையே என்று நினைக்க தேவையில்லை., சரியான தருணத்தில் உங்களின் தாம்பத்யத்தை மேற்கொள்ளலாம்.
தனது துணையின் தாம்பத்திய விருப்பத்தை இருவரும் அறிந்து ஒருவருக்கொருவர் உடலளவிலும்., மனதளவிலும் தயாராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்., நிறைவேற்ற முடியவில்லை என்ற பட்சத்தில் முயற்சியாவது செய்யலாம். இது உங்களின் துணைக்கு உங்கள் மீதுள்ள காதலை அதிகரிக்கும்.
தாம்பத்தியத்தில் கண்ட விதிமுறைகளை விதித்து., உங்களின் துணை ஆசையில் பெட்ரோலை ஊற்றிவிடாதீர்கள். அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுங்கள். அவ்வாறு நீங்கள் கண்ட விதிமுறையை விதிக்கும் பட்சத்தில்., விதிமுறையற்ற நபரிடம் தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்ள முயற்சிகள் எடுப்பதற்கு எண்ணங்கள் தோன்றும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.
தாம்பத்தியத்தின் தாகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த அலைவரிசையில் இருக்காது. ஆண்களுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும்., பெண்ணிற்கு அந்த ஆசை அடிக்கடி வருவதில்லை. இதனால் தேவையற்ற தொல்லையை தனது துணைக்கு தர கூடாது. தனது மனைவியின் மன நிலையை புரிந்து கொண்டு செயல்பட்டு., அவரை அழைத்து அமர வைத்து அவரது மனநிலையை சாந்தப்படுத்தி., சிறிது மேல் விளையாட்டை துவங்கிய பின்னர் அவரின் அனுமதி வந்தவுடன் தாம்பத்யத்தில் ஈடுபடலாம்.
சில வகை பெண்களுக்கு தங்களின் கணவருடன் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமானது இருக்கும்., அந்த சமயத்தில் அவர்களின் ஆசையை புரிந்த கொண்டு., முடிந்தளவு தனது துணையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். ஆபாச இணையதளங்களில் காணொளிகளை பார்ப்பது., புத்தகங்கள் படிப்பது போன்றவை என்றாவது ஒருநாள் இருக்கும் பட்சத்தில் தவறொன்றும் இல்லை., இதனை தொடர்ந்து பார்த்தோ அல்லது படித்தோ வரும் பட்சத்தில்., வீடியோ பார்க்காமல் ஒன்றும் முடியாது என்ற நிலையானது ஏற்பட்டு விட கூடாது.
தாம்பத்தியத்தில் இன்பத்தை அதிகரிப்பதற்கு கீரை மற்றும் பழங்களுக்கு சக்திகள் அதிகளவு உண்டு. கிடைக்கும் நேரத்தில் மீன்., புறா மற்றும் வெள்ளாட்டுக்கறி., பேரிச்சம்பழம்., பசும்பால்., பாதாம்பருப்பை எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக இருவரும் தாம்பத்தியத்தில் உச்சகட்ட நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
உடலை முடிந்தளவு குளிர்ச்சியாக வைத்து கொண்டு., தாம்பத்தியம் துவங்குவதற்கு முன்னதாக குளியல் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தி., தூக்கம் வரும் நேரத்தை அறிந்து அதற்கு முன்னதாகவே தாம்பத்தியத்தை துவங்க வேண்டும். நீண்ட நேரம் அலுவலகத்தில் பணியாற்றி நள்ளிரவில் வீட்டிற்கு வந்து தனது துணையை தாம்பத்தியத்திற்கு அழைத்தால்., அவ்வுளவு நேரம் காத்திருந்து வெறுப்படைந்து இன்பத்தின் தூண்டுதலுக்குரிய கீழ் நிலைக்கு சென்ற பின்னர் அவர் தாம்பத்தியத்திற்கு வர மாட்டார்.
தற்போது வரை தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் பெரும் குறையாக இருக்கும் பிரச்சனை தம்பதியின் அவசரம். வீட்டிற்கு யாரும் வராத நேரம் அல்லது வருவதற்கு நீண்ட நேரம் ஆகும்., தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத இடம் என்று மனதளவில் தயாராக இருக்கும் போது மட்டுமே இன்பத்தின் உச்சத்தை அடையலாம்.
முடிந்தளவு பெண்கள் சுற்றுலாவிற்கு அழைக்கும் போது எந்த விதமான ஆலோசனையும் இல்லாமல் செல்வது., அவரின் தாயார் இல்லத்திற்கு அழைத்தாள் செல்வது போன்றவை அவசியம். தனக்கு தேவையானதை கூச்சமின்றி தனது துணையிடம் கூறி., அவரால் முடிந்தளவு அந்த விஷயத்தை செய்தால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தாம்பத்தியம் துவங்குவதற்கு முன்னதாகவும்., முடிந்த பின்பும் தனது துணையை விட்டு உடனடியாக கூடுதலா அல்லது விலக்கமோ கூடாது. தாம்பத்தியத்தை மெல்ல மெல்ல எந்த விதமான அவசரமும் இல்லாமல் துவங்கி., முடிந்தால் தாம்பத்திய துவக்கத்தில் இருவரும் இன்ப குளியல் பின்னர் தாம்பத்தியம்., அதற்கு அடுத்தபடியாக ஆசை முடிந்தவுடன் ஆனந்த குளியல் மற்றும் கூடுதல் இன்பத்துடன் கூடிய பாசத்தின் முத்தம் என்று வழங்கி செயல்பட்டால் இல்லறம் என்ற விதமான பிரச்சனையும் இன்றி நடக்கும்.
Tamil online news Today News in Tamil
English Summary
couple enjoy know about this