தாம்பத்தியத்தில் ஏற்படும் தடைகள்., காரணங்கள் மற்றும் தீர்வு என்ன?..!! - Seithipunal
Seithipunal


தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு எந்த நேரமும் அவர்களின் உடல் மற்றும் மனம் தயாராக இருக்காது. தாம்பத்தியத்திற்கு உரித்தான புறசூழல் மற்றும் மனம் போன்றவை தயாராக தருணம் வேண்டும். 

தாம்பத்தியத்தில் இது போன்ற சூழ்நிலை மற்றும் மனதின் காரணமாக சில நேரத்தில் தடைகள் ஏற்படுகிறது. இதனை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். தாம்பத்தியத்திற்கு விரும்பம் இல்லாத பட்சத்தில்., துணையை வற்பறுத்துவது கசப்பை ஏற்படுத்தும். 

இந்த கசப்பானது பின்னாளில் மனக்கசப்பாக ஆரம்பித்து., தாம்பத்தியத்தில் வெறுப்பை ஏற்படுத்தி., இல்லறத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். தம்பதியின் உணர்வுக்கு ஒருவருக்குஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது முக்கியமான ஒன்றாகும். 

தாம்பத்தியம், கள்ளக்காதல், உடலுறவு, உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம், husband wife enjoy, illegal affair, affair, couple enjoy,

ஆசை என்பது ஒரு புறம் இருந்தாலும்., துணையின் உணர்வு மற்றும் உடல் சூழ்நிலைக்கு மதிப்பளித்து விருப்பம் இல்லாத பட்சத்தில் தாம்பத்தியத்திற்கு அழைத்தல் மற்றும் வற்பறுத்தல் கூடாது.  

தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாததற்கு 1.உடலின் அசதி அல்லது உடல்நல குறைவு., 2.மன அழுத்த பிரச்சனை., 3.மாதவிடாய் நாட்கள்., 5.தம்பதிக்கு இடையேயான சண்டை., 6.அதிகளவு மது அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொள்ள ஆசைப்படுவது., 7.கடந்த தாம்பத்தியத்தின் போது அரங்கேறிய மோசமான நிகழ்வு., 8.வருடக்கணக்கில் ஒரே நிலையில் (Sexual Position) தாம்பத்தியம் மேற்கொள்வதால் ஏற்படும் ஆர்வமின்மை போன்று பல காரணங்கள் உள்ளது.

மேலே உள்ள காரணத்தின் கீழ் தாம்பத்தியத்தை தவிர்க்க நினைக்கும் பட்சத்தில் விலகுவதே சிறந்தது. தாம்பத்தியத்தில் மனம் மற்றும் உடல் இரண்டும் ஒத்துழைக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் தாபத்தியத்தின் இன்பம் எல்லையற்று விளக்க இயலாத அளவு இருக்கும். 

தாம்பத்தியம், கள்ளக்காதல், உடலுறவு, உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம், husband wife enjoy, illegal affair, affair, couple enjoy,

சின்ன சின்ன பிரச்சனைகளால் தாம்பத்தியம் தடைபட்டு., வற்புறுத்தலின் பேரில் தாம்பத்தியம் மேற்கொண்டு வந்தால் எந்த விதமான மகிழ்ச்சியும் தாம்பத்தியத்திலும்., இல்லறத்திலும் இருக்காது.

தம்பதிகளுக்குள் தாம்பத்திய உணர்வு எழுதல் முதற்கட்டம் மற்றும் முக்கிய கட்டமாக இருக்க வேண்டும். இருபாலரும் தங்களின் வாழ்க்கையை நினைத்து பொறுமையாக மற்றும் நிலையாக உழைக்க வேண்டும். சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி அதிகரித்துவிடும். சிலருக்கு கூச்சம் காரணமாக நெருங்க சில நாட்கள் எடுக்கும். தனது துணையின் மனநிலை மற்றும் குணத்தை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy distribution and solution


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->