கள்ளக்காதல் உறவுகளுக்கான காரணங்கள் என்ன?. தீர்வு என்ன?..! - Seithipunal
Seithipunal


காதல்.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான வேறுபாடை கொண்ட அந்த ஒற்றை சொல்லில் உலகம் பல விதமாக இயங்கி வருகிறது. காதலுக்கு கண்கள் இல்லை, காதுகள் இல்லை, மூக்குகள் இல்லை என்று காதலர்கள் கவிதை எழுதும் அவர்களின் கற்பனை ஆற்றல் மிக்கது என்பதை பல காதல் நம்மிடையே உணர்த்தி நம்மை வியந்து காணவும் வைத்துள்ளது. பரிணாமத்தின் வளர்ச்சியில் ஆடையில்லாமல் சுற்றிய ஜோடி, ஆடையுடன் பழக தொடங்கி, இன்று கலாச்சாரம் என்ற பெயரில் ஆடை எப்படி செல்கிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் உலகத்தின் அடையாளமாக, அன்பின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் காதல் எப்படியான சூழலை சந்திக்கிறது என்றால் கேள்விகள் தான் பதிலாக மிஞ்சுகிறது. விஷயத்திற்கு செல்லலாம். 

காதல், யார் மீது வரும்? எப்படி வரும்? எதனால் வந்தது? என்பதற்கு விடை தேடினால் கேள்விகள் நீண்டு கொண்டே செல்லும். தனது உள்ளம் கவர்ந்தவரை காதலித்து திருமணம் முடிக்க ஏங்கும் இருபாலரும், எதோ ஒரு வகையில் தங்களின் அசாதாரண காதலால் பல சோகத்தை பரிசாக தருகின்றனர். ஆம்., இன்று கள்ளக்காதல் எதனால் ஏற்படுகிறது என்பதை தான் பார்க்க இருக்கிறோம். அன்பின் பரிணாமம் காதலாகி, இன்று கள்ளக்காதலாக நிற்கும் சோகம் தொடங்குவது எப்படி?. எந்த நிலையில் ஆணோ பெண்ணோ தவறு செய்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டால் இல்லறம் சிறப்பாகும். 

காதல் என்பதை வெளிக்கொணர திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் நம்மை எப்படி ஆட்டோவித்ததோ, அதனைப்போன்று அதே திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் கலாச்சார புரட்சிகள் என்ற சீரழிவால் இன்று உருவாகிஉள்ளதன் பரிணாம பெயர் தான் கள்ளக்காதல். அதாவது திருமணம் முடிந்த ஆணோ பெண்ணோ, தனது துணைக்கு தெரியாமல் மற்றொரு நபரால் கிடைத்த அன்பை உடலால் தீர்ப்பது அல்லது பதில் அளிப்பது, அதனால் உறவு கொள்வது கள்ளக்காதல் ஆகிறது. கள்ளக்காதல் விஷயங்களில் அவரவரின் மனநிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரை குற்றம் சாட்டலாம். ஆனால், அந்த தனிநபரின் சூழ்நிலை, பேராசை, எதிர்பார்ப்பு, தாக்குதல் என்று பல்வேறு காரணிகளால் இதுபோன்ற முறையற்ற காதல்கள் உருவாகிறது. 

திருமணம் ஆன தம்பதியில் ஆணோ/பெண்ணோ திருமணம் ஆகாத நபருடனோ, திருமணம் ஆகாத ஆண்/பெண் திருமணம் ஆன ஆண்/பெண் ஆகியோருடன் எதோ ஒரு சூழ்நிலைக்காக பழக்கத்தை ஏற்படுத்தி தங்களின் நிலையறியாமல் மனதை பறிகொடுத்து கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர். பொதுவாக ஒரு ஆண் தனக்கு வர வேண்டிய மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையை தனது மனதிற்குள் வைத்துக்கொள்கிறான். திருமணத்தில் அவன் எதிர்பார்ப்பு நிகழவில்லை என்றால், சில வருடங்கள் கழித்த பின்னர் தனக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களுடன் உறவை ஏற்படுத்துகிறான். 

பெண்களை பொறுத்த வரையில் தனது துணையால் தனக்கு கிடைக்காத தாம்பத்திய திருப்தியின்மை, துணையின் கொடூர செயல் போன்ற பல காரணத்தால் தனக்கான ஆதரவை தெரிவிக்கும் நபருடன் கிடைக்கும் பழக்கத்தால் பின்னாளில் அவருக்காக வாழ துணிகிறார். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் பாவச்செயல் இறுதியில் மரணத்தை தழுவவும் கள்ளக்காதல் வழிவகை செய்கிறது. இதுதொடர்பான பிரச்சனை தொடர்ந்து நடந்தும் வருகிறது. புதிதாக காதல் வயப்படாமல் திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் முதல், நன்கு அறிந்து தெரிந்து பழகி காதல் வயப்பட்டு திருமணம் செய்யும் தம்பதியிலும் இந்த சோகம் நிகழத்தான் செய்கிறது. 

பாலியல் மருத்துவ வல்லுனர்களிடம் இது குறித்து கேட்டால், " பொதுவாக காதல் திருமணமோ, சாதாரண இயல்பு திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்க கூடாது. தாம்பத்திய விஷயங்களில் இருபாலரும் சிறந்து விளங்க வேண்டும். இன்றுள்ள காலத்தில் பலரும் கலாச்சாரம் மற்றும் புரட்சி என்கிற பெயரில் மது, கஞ்சா, போதை வஸ்துக்கள் போன்றவற்றை அதிகளவு எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் உடலின் நலம் கேடாகி, பின்னாளில் உடல் உபாதை என்ற பெயரில் ஆண்மை இழப்பு, கருவுற இயலாமை போன்ற பல்வேறு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. இதில், சில தம்பதிகள் போதையில் தாம்பத்தியம் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு செய்தால் வெறும் 8 மாதத்தில் வெறுப்பு ஏற்பட்டு, தாம்பத்தியம் மொத்தமே சீர்குலைகிறது. 

இதனால் தனக்கு இன்பத்தை தரும் மற்றொரு நபரை தேடி அலைகின்றனர். சூழ்நிலையை பொறுத்து தனக்கு கிடைக்கும் எதிர்பாலினத்துடன் உறவு மேற்கொள்கிறார்கள். இந்த கள்ளக்காதல் என்பதை வெளியே தெரிந்தால் அவமானம் என்று தெரிந்தும் அவர்களை தொடர்ந்து செய்ய வைக்கிறது. எந்த நேரமும் சண்டையிடும் கணவன், மது போன்ற போதை வஸ்துக்களுடன் மூர்க்கத்தனமான தாம்பத்தியத்திற்கு மனைவியை வற்புறுத்துவது, எந்த நேரமும் திட்டிக்கொண்டே இருக்கும் மனைவி போன்ற பல காரணத்தால் முறையற்ற உறவுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தம்பதிகள் இருவரும் அன்போடு இருக்க வேண்டும், என்ன சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். வாழ்க்கையில் ஈகோ எதிரி என்பது இந்த விஷயத்திற்கு பொருந்தும். 

மதுபோன்ற போதை வஸ்துக்களை எடுத்துக்கொண்டு தாம்பத்தியம் கட்டாயம் மேற்கொள்ள கூடாது. இயற்கையான தாம்பத்தியமே நீடித்த இன்பம் என்பதை உணர வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நம்பிக்கை பாத்திரமாக இருக்க வேண்டும். அன்பை எந்த இடத்திலும் வெளிக்கொணர தயங்க கூடாது. தாம்பத்தியத்தில் இருவருக்கும் பிடித்துள்ளதை கேட்டு செய்ய சொல்லி செயல்பட வேண்டும். பிடிக்காததை செய்ய சொல்லி வற்புறுத்த கூடாது.

மூர்க்கத்தனமான தாம்பத்தியமும் வில்லத்தனம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எதோ ஒரு சூழ்நிலையில் துணையில் யாரோ ஒருவர் தவறிழைத்து, அவர் மனம் திருந்தி வர தயாராக இருந்தால் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட பின்னர் துணையின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். ஊரார் ஆயிரம் பேசுவான், எனது மனைவி/கணவன் இனி நல்லபடியாக இருப்பான் என்பதை நீங்கள் இருவரும் வாழ்ந்து உணர்த்த வேண்டும் " என்று ஆலோசனை கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caution and Solution of Illegal Affair Issue 4 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->