சுத்தமில்லாத தாம்பத்தியதால் மனைவியின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறித்த கணவன்.. குற்றஉணர்வோடு கண்கலங்கும் சோகம்.. தம்பதிகளே உஷார்.!! - Seithipunal
Seithipunal


சுகாதாரம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எப்படி நமது முகத்தினை பளபளவென காட்டிக்கொண்டு, நமது அழகுக்கு அளகேற்றவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பல விஷயங்களை செய்து வருகிறோமோ, இதே முக்கியத்துவத்தை நமது பிறப்புறுப்புக்களுக்கும் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். வெளிப்புறத்தில் பகட்டான ஆடையணிந்து, நமது அந்தரங்க பாகத்தின் சுத்தத்தை பேணாமல் இருத்தல் பெரும் பிரச்சனைக்கு வழிவகை செய்யும். இதில் ஆண் தான் - பெண் தான் என்று மாறி மாறி குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, ஆண்மகன் தனது எதிர்காலம் மற்றும் தனது  மனைவியின் எதிர்கால பரிபூரண வாழ்க்கையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இனி செய்திக்குள் செல்லலாம். 

தம்பதிகள் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள். இந்த மூன்று பெண் குழந்தைகளில் இரண்டு பெண்களுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இந்த இரண்டு பெண் குழந்தைகளின் திருமணத்திற்க்கே வறுமையில் வாடிய பெற்றோர்கள் படாதபாடுபட்டுவிட்டனர். குடியிருந்த வீட்டினை விற்பனை செய்யும் சூழல் வந்து, அக்கம் வாங்கிய கடனையும் அடைக்க இயலாது திண்டாடிக்கொண்டு இருந்தனர். இந்த கடன்சுமைகள் இளையமகளின் திருமணத்தை எண்ணிப்பார்க்க விடவில்லை. குடும்பத்தின் வறுமையை உணர்ந்த இளையமகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிக்கு சென்றுள்ளார். இவர் அழகான தோற்றத்தை கொண்டவர் என்பதால், இவரது 20 வயதின் போதே பல இளைஞர்கள் காதல் வலையை வீசியெறிந்தனர். 

குடும்பத்தின் நலனிற்க்காக அனைத்தையும் துறந்த பெண்மணி, தனது இளமை குறைத்துக்கொண்டு இருப்பது கூட தெரியாமல் 30 வயதை எட்டிவிட்டார். இதற்கு மேலாக நமது பெற்றோர் நமக்கு திருமணம் செய்து வைப்பது கடினம் என்று எண்ணிக்கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து இதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நபர், பெண்ணுடன் பாசத்துடன் பழகி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாமல் 36 வயதாகியிருந்த நிலையில், இவர் ஓட்டுநர் தொழில் மட்டுமல்லாது பழைய கார்களை விற்பனை செய்யும் பணியும் செய்து வந்துள்ளார். இருப்பினும் கண்டபடி செலவு மற்றும் மது பழக்கம். 

ஏற்கனவே வருடங்கள் ஓடிவிட்டது, இவரையும் விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய பெண்மணி, அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் பணிக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், பெண்ணும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இவருக்கு வயது சுமார் 40 ஆனது ம் ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்று வலி, உடலின் பலவீனம், காய்ச்சல் போன்று தொடர்ச்சியாக அவதியுற்று வந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று மேற்கொண்ட சோதனையில் கருப்பை வாய் புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், குடும்பத்தில் யாருக்கும் கருப்பை புற்றுநோய் இல்லை, பரம்பரை வழியாகவும் வரவில்லை. குடும்பத்தின் முதல் பெண்மணியாக பாதிக்கட்டுள்ளார். 

இதற்கான சிகிச்சையை துவங்கி எப்படியும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர் நம்பிக்கை தெரிவிக்கவே, மனஉளைச்சலில் பெண்ணும் இருந்துள்ளார். மேலும், பெண்ணிற்க்குள் ஒரு எண்ணம். நான் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன், கண்டதையும் சாப்பிட்டதில்லை, உடற்பயிற்சிகள் கூட செய்துள்ளேன், எனக்கு எப்படி? என்ற சந்தேகம் மேலோங்கி இருந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு தீவு காண தனது கணவரையும் அழைத்து கொண்டு மருத்துவரை சந்திக்கவே, மருத்துவர் இருவரிடமும் அவர்களின் வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கவழக்கம், மன ஆரோக்கியம், தாம்பத்திய சுகாதாரம் போன்றவற்றை கேட்டறிந்துள்ளனர். இவரது கணவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். 

நல்லபடியாக பதில் கூறிக்கொண்டு இருந்த பெண்ணின் கணவர், தாம்பத்திய சுகாதார பகுதியில் உளறவே, இதனை உணர்ந்துகொண்ட மருத்துவர் உண்மையை அறிந்துள்ளார். இதன் மூலமாக மருத்வவர்கள் தெரிவித்த பதில் " திருமணம் முடிந்த பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் அந்தரங்க சுத்தம் என்பது இல்லாவிடில், மேற்கூறிய பிரச்சனை ஏற்படுகிறது. மது அருந்திவிட்டு மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்துள்ளது. பிற விஷயங்களை போல இதிலும் அலட்சியம் அதிகரித்துவிட்டது.

தாம்பத்தியம் மேற்கொள்வதற்கு முன்னரும், பின்னரும் அந்தரங்க உறுப்புகளை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பதால் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். தாம்பத்தியத்தில் அவசரம் இருந்தால் மட்டும் போதாது, ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும் " என்று தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட மனைவி கண்களின் கண்ணீரோடும், கணவன் குற்ற உணர்ச்சியோடும் தலைகுனிந்து இருந்தது பெரும் சோகமே... சுத்தம்.. அந்தரங்க சுத்தம் எவ்வுளவு முக்கியமான ஒன்று என்பது கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். ஆண்களே.. உங்களின் தாம்பத்திய அவசரத்திற்கு, உங்கள் அன்பு மனைவியின் உயிருக்கு பாதகம் செய்து விடாதீர்கள்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A husband who kills his wife through improper sexual intercourse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->