நடு ரோட்டில் பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்.! கூண்டோடு தூக்கிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை உட்கார வைத்துக்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ கடந்த 30 ஆம் தேதி சமூகவலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நள்ளிரவில் பெண்களுடன் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:- 

“குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் வண்டி எண்ணை வைத்து அவரது முகவரியைக் கண்டுபிடித்து சென்று அவரை கைது செய்தோம். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. 

இளைஞர் உடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருமே தலைக்கவசம் அணியவில்லை. இந்த குற்றத்தின் அடிப்படையில் மூன்று பேரின் மீது சட்டப்பிரிவு 308 -ன் படி கடந்த மாதம் 31 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested for bike stunts with girls in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->