இரயில் நிலையத்தில் அரங்கேறிய விபரீதம்.! 25 பேர் உடல் கருகி பரிதாப பலி.!! 47 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் சோகம்.!!
train accident in Egypt 25 peoples died
எகிப்து நாட்டின் தலைநகரான கெயிரோவில் இரயில் நிலையமானது உள்ளது. இந்த இரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்து கொண்டு இருந்த இரயில்., அங்குள்ள நடைபாளத்தில் எதிர்பாராத விதமாக வந்த வேகத்தில் மோதியது.
இந்த இரயில் பெட்டிகள் அனைத்தும் நிலைகுலையவே., எஞ்சினில் திடீரென மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இரயில் பெட்டியில் இருந்த பயணிகள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்துக்கொண்டு இருந்தனர்.
இரயிலில் இருந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் மளமளவென பரவிய தீயில் சிக்கி சுமார் 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட துவங்கினர். மேலும்., இந்த விபத்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்க துவங்கினர்.
காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை சுமார் 25 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும்., 47 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
train accident in Egypt 25 peoples died