எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தை போலவே., நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட சொகுசு பேருந்துகள்.! 27 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் நொடிக்கு பல்வேறு விதமான விபத்துகள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. அவ்வாறு நடைபெறும் பல்வேறு விபத்துகளில் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தும்., உடல் காயத்தாலும் பாதிக்கப்பட்டு இருப்பதை தினமும் பல்வேறு செய்திகளின் மூலமாக நாம் அறிந்துகொண்டு தான் இருக்கிறோம். 

பொலிவிய நாட்டின் தலைநகரான லாவில் இருந்து அங்குள்ள சல்லப்பட்டா நகரம் சுமார் 250 கி.மீ தூரத்தொலைவில் அமைத்துள்ளது. இந்த இரு நகரில் இருந்து எதிர்திசையில் நேற்றிரவு கிளம்பிய பேருந்துகள்., நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் சுமார் 27 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும்., 37 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி துடித்தனர். 

இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினர் மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய வர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tow bus accident in poliviya 27 peoples died., 37 peoples hardly injured in Bolivia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->