அதிரடியாக நடத்தப்பட்ட வேட்டை.! 14 தீவிரவாதிகள் பலி.!!
அதிரடியாக நடத்தப்பட்ட வேட்டை.! 14 தீவிரவாதிகள் பலி.!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 45 விழுக்காடு அளவிற்கான பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் ஆதிக்கத்தை காண்பிப்பதற்காக அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
அவர்களின் தாக்குதலை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவ படையினரும்., விமான படையினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்து மக்களை காத்து வருகின்றனர்.
அந்த வகையில் கஸ்னி மாகாணத்தில் உள்ள தேஹ்யாக் மாவட்டம் சுலிமன்ஸாய் கிராமத்தில் இருந்த பயங்கரவாதிகள் சுமார் 14 பேர் அதிரடி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்த 15 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
English Summary
TERRORIST KILLED IN APKANISTAN