இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்துவதா ? தமிழக இஸ்லாமிய அமைப்பு வெளியிட்ட தகவல்
tamilnadu muslim party release information about sri lanka issue
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் செயலாளர்கள் பைசல், பாரூக் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் கடும் கண்டனதிற்குக்குறியவை இந்த சம்பவங்களில் ஈடுபட்டோர் மனித குலத்துக்கு எதிரானவர்கள் மனித மிருகங்கள் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குற்றவாளிகளை தூக்கில் இடப்பட வேண்டும் இந்த சம்பவத்தின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஈடுபட்டு உள்ளது என்றும் அந்த அமைப்புக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்றும் தவறான செய்தியை பரப்பப்பட்டு வருகின்றன அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எங்கள் அமைப்பு தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் அமைப்பு சார்பில் பல சமுதாய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற இழி செயலை செய்யவே மாட்டோம் அதற்கு உடன் பட மாட்டோம் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்
English Summary
tamilnadu muslim party release information about sri lanka issue