நடுவானில் தூங்கிகொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய தமிழக வாலிபர் .! கண்விழித்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரபு ராமமூர்த்தி. 35  வயது நிறைந்த இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப துறையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன்லாஸ் வேகஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு,  விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவருடைய சீட்டிற்கு மறுபுறம் அமர்ந்திருந்த, இளம்பெண் தூங்கிக்கொண்டே வந்துள்ளார். இந்நிலையில், யாரோ தன்னை தொடுவதை போல உணர்ந்த அந்த பெண்,  கண் விழித்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் போட்டு , இதுகுறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

     

 பின்னர்  விமான நிலைய போலீசாரிடம் பிரபு ராமமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 மேலும் நடுவானில் பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu boy sex abused girl in flying fight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->