குழந்தைகள் கண்முன்னே நடந்த துயர சம்பவம்: இத்தனைக்கும் பிறகும் சேர்ந்து வாழத் துடிக்கும் மனைவி..!!
கனடாவில் தனது தாயை அடித்துக் கொன்ற இந்தியருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தனது தாயை அடித்துக் கொன்ற இந்தியருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சுர்றி நகரில் வசிக்கும் இந்தியர் சுக்வீர் சிங், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது மனைவியை குழந்தைகள் கண்முன்னே அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
இதைப்பார்த்த அவரது தாயார் மகனைத் தடுக்க முயல அவரையும் அடித்திருக்கிறார் சுக்வீர்.
தாயின் தலை, நெஞ்சு மற்றும் அடிவயிற்றில் அடித்து உதைக்க, கீழே விழுந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த சுக்வீர் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
தன்னை சிறையிலடைக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த சுக்வீர்,
தான் நடந்ததை மறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளான். சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின் தனது குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும், அதனால் அவர்கள் நடந்தவற்றை ஒருவேளை மறந்துவிடலாம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.
இத்தனைக்கும் பிறகு அவனது அன்பு மனைவியோ தான் இன்னும் அவனுடனேயே வாழ விரும்புவதாகவும் தனது மாமியாரின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு சென்று புனித நதியில் கரைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
saddest incident happened in canada