ரஷியாவின் கட்டிட விபத்து.! கொத்துக்கொத்தாக எடுக்கப்படும் மனித உடல்கள்.!! 37 பேர் இடிபாடுகளிலில் சிக்கி பரிதாப பலி.!!
RUSSIA BUILDING COLLAPSE FIRE ACCIDENT DEATH INCREASE 37 PEOPLES
ரஷியா நாட்டில் உள்ள மேக்னி டோகோர்ஸ் நகரில் இருக்கும் 10 அடுக்குமாடி குடியிருப்பானது திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த கட்டிடமும்., அதன் அருகில் இருந்த 48 வீடுகளும் சேதமடைந்தன.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்., 36 பேர் இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை அவர்களின் நிலைமை தெரியவில்லை என்றும்., இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., இறந்தவர்களின் உடலை பார்த்த உறவினர்கள் கதறியலும் கட்சி அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பகுதியில் -17 டிகிரி குளிர் வெப்பநிலை நிலவிவரும் நிலையில்., மீட்பு படையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடிபாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது., அங்குள்ள இடிபாடுகளில் இருந்து குழந்தையின் அழுகுரலை கவனித்த அதிகாரிகள் குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில்., தற்போது (03.01.18) வரை சுமார் 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும்., 20 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகிய நிலையில்., தற்போது 16 பேர் பலியாகியுள்ளதாகவும்., மொத்தமாக 37 பேர் பலியாகிஉள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்., அங்கு நிலவும் கடுமையான பனிபொழிவிற்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
RUSSIA BUILDING COLLAPSE FIRE ACCIDENT DEATH INCREASE 37 PEOPLES