5 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை.. மூன்றாவதாக கரம் பிடித்த அரசியல் பிரபலம்: தலை தலையாய் அடித்து புலம்பும் கணவர்..! - Seithipunal
Seithipunal


பிரபல பாகிஸ்தான் அரசியல்வாதியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானுக்கு(63) மூன்றாவது திருமணம் நடந்துள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர். இப்பொழுது பாகிஸ்தானில் பிரபல அரசியல் கட்சி ஒன்றின்  தலைவராக பதவி வகித்து வருகிறார்.

1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார்.

கடந்த 1992 இல் பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்றபோது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பதவி வகித்தவர்.

ஓய்வு பெற்ற பின்னும் மக்கள் நலன் பெற லாகூரில் ஒரு மருத்துவமனையை கட்டி கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து அவரது அரசியல் வாழ்வும் தொடங்கியுள்ளது.

திருமண வாழ்வை பொறுத்த வரையில், முதன் முதலாக கடந்த 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒன்பது ஆண்டுகளில் விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பின்னர் இரண்டாவதாக, கடந்த 2015ஆம் ஆண்டில் ரேஹாம் கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு, அந்த மணவாழ்வும் 10 மாதங்களில் முறிந்து மீண்டும் விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் தனக்கு அரசியலில் பக்க பலமாக இருந்து வரும் மேனகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேனகாவுக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

மேனகாவின் கணவரிடமிருந்து விவாகரத்து பெற வைத்து விட்டு, இருவரின் திருமணமும் நடந்திருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

political celebraty marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->