பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் - 5.0 ரிக்டர் பதிவு!
Philippines earthquake
தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.