பள்ளத்தில் கவிழ்ந்த டிரக்... யாத்ரீகர்கள் பரிதாப பலி.! பாகிஸ்தானில் பரபரப்பு!
Pakistan truck overturned accident 13 killed
பாகிஸ்தான், பலோசிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்க பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பலோசிஸ்தானில் உள்ள ஷா நூரானி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
Pakistan truck overturned accident 13 killed