அதிகாலையில் அதிர்ந்த பாகிஸ்தான்: 5.2 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு!
Pakistan early morning Earthquake
பாகிஸ்தானில் இன்று காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, பாகிஸ்தானில் இன்று காலை 5 .35 மணியளவில் 5.2 லிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் இலங்கை கொழும்புவில் 1326 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்தது.
இதன் காரணமாக கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Pakistan early morning Earthquake