திடீரென வெடித்து சிதறிய சுரங்கம்: 12 தொழிலாளர்கள் பரிதாப பலி.! பிரதமர் இரங்கல்!
Pakistan coal mine explosion
பாகிஸ்தான், சர்தாலோ என்ற பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீத்தேன் வாயுகசிந்தால் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Pakistan coal mine explosion