பயங்கரவாதிகள் தாக்குதல் : பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பலி!
pakistan 4 soldiers killed
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டல பகுதியில் பலுகிஸ்தான் இருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக "பலோச் ராஜி அஜோல் சங்கள்" என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ரோந்து படையின் மீது பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். பலுகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
English Summary
pakistan 4 soldiers killed