விமானங்கள் கட்டுப்பாட்டை இழக்கும், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும், பயணத்தில் இருக்கும் ரயில்கள் கட்டுப்பாட்டை இழக்கும்..!!
இனி போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டால்அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.
இனி போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டால் அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.
அது மட்டுமின்றி நவீன தொலைத்தொடர்பு கருவிகள் அனைத்தும் இதனால் செயலிழந்து தனிமைப்படுத்தப்படும் சூழல் முதலில் உருவாகும்.
இதனால் நாடே ஸ்தம்பிக்கும், இந்த தருணத்தை பயன்படுத்தி கொடூர தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா திட்டமிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் கட்டுப்பாட்டை இழக்கும், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும், பயணத்தில் இருக்கும் ரயில்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என கற்பனைக்கும் எட்டாத துயரங்கள் நிகழும் எனவும் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் என ஒன்று துவங்கினால் அதை மிக விரைவில் முடித்துக் கொள்ளும் முனைப்புடனே வடகொரியா செயல்படும். இதனால் அணுசக்தி மின்காந்த அலைகளின் தாக்குதல்களையே அவர்கள் முயற்சிக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.
English Summary
North Korea could collapse within a year due to US sanctions, a defector and former Pyongyang official has said