நாசாவின் ஆர்டெமிஸ்-1 விண்கலம் வருகின்ற 23ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


நாசாவின் ஆர்டெமிஸ் 1 விண்கலம் வருகின்ற 23ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பு நாசா மனிதர்களை 2025க்குள் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஆர்டெமிஸ்-1 வின்கலத்தை மனிதர்கள் இல்லாமல் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், நிலைத்தன்மை மற்றும் எரிபொருள் கசிவு உள்ளிட்ட தொழில் நுட்ப காரணங்களால் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஆர்டெமிஸ்-1 விண்கலம் வருகின்ற செப்டம்பர் 23 அல்லது 27 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக நாசா தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விண்கலத்தில் எரிபொருள் கசிவை, குழு அமைத்து சரி செய்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA plans to launch Artemis 1 on Sep 23


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->