தாய்ப்பால் கொடுத்தபோது திடீரென உயிரிழந்த தாய்! அடுத்த சில நிமிடங்களிலேயே துடிதுடிக்க நேர்ந்த துயரம்!!
mother dead while breast feeding
அயர்லாந்தில் வசித்து வந்தவர் மேரி டவுனி. இவருக்கு சமீபத்தில் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தை பிறந்த சில தினங்களிலேயே, டாரக் என பெயரிடப்பட்டகுழந்தைக்கு மருத்துவமனையில் இருந்தபடியே மேரி தாய்ப்பால் கொடுத்துள்ளார் .
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையை கீழே போட்ட மேரி வலிப்பு அதிகமாகி குழந்தை மீதே விழுந்துள்ளார்.
இதில் உடனேயே மேரி உயிரிழந்துள்ளார். மேலும் அங்கு விரைந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளித்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் குழந்தையும் உயிரிழந்தது.
இந்நிலையில் இவர்களது எதிர்பாராத மரணத்தால் மேரியின் கணவர் கிரோன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து , மேரியின் கையிலேயே குழந்தை இருக்கும் நிலையில் இருவரையும் ஒன்றாக புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களது இறுதிச்சடங்கு விரைவில் நடைபெறவுள்ளது.குழந்தையின் உடலுக்கு இன்று பிரேதபரிசோதனை நடைபெற்றது.
English Summary
mother dead while breast feeding