நீங்கல்லாம் எப்ப தான் திருந்த போறீங்களோ.! இறந்து போன தந்தையின் உடலுடன் மாடல் அழகி செய்த கொடுமை.!! உங்களல்லாம் கடவுள் தான் திருத்தனும்!!!
நீங்கல்லாம் எப்ப தான் திருந்த போறீங்களோ.! இறந்து போன தந்தையின் உடலுடன் மாடல் அழகி செய்த கொடுமை.!! உங்களல்லாம் கடவுள் தான் திருத்தனும்!!!
தற்போது வளர்ந்து வரும் காலகட்டங்களில், சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. இதனால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு தீமைகளும் நடந்து கொண்டு தான் வருகின்றன. இதிலும் இளைஞர்களிடையே செல்பி மோகம் தலை விரித்தாடுகிறது. எங்கு சென்றாலும் அந்த இடத்திலிருந்து ஒரு செல்பி எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், செர்பியாவை சேர்ந்த ஜெலிகா லூபியிக் என்ற இளம்பெண் மாடல் அழகி ஒருவர் அவரது தந்தை இறந்ததை செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெலிகாவின் தந்தை வயது முதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளம்பர பைத்தியமான ஜெலிகா, வீட்டில் இறந்து கிடந்த தனது தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது எங்களது ஆசை, ஆனால் அது நமது கையில் இல்லை. ஒரு நல்ல மகளாக என்னை வளர்த்ததற்கு எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும் எனவும் பதிவிட்டிருந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், அவரை பின்பற்றுவோர் இந்த பதிவை பார்த்து ஆத்திரமடைந்து, மனநோயாளிகள் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவார் என மெசேஜ் அனுப்பினர். அது மட்டுமின்றி கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் வந்த நிலையில், ஜெலிகா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.
English Summary
model selfi with her father dead body