இது சைக்கிளில் வந்து கார்களில் செல்வதர்கான இடமல்ல.!-பரபரப்பு பேச்சு
இது சைக்கிளில் வந்து கார்களில் செல்வதர்கான இடமல்ல.! -பரபரப்பு பேச்சு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகர சபைக்கு தேர்வான ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போது இப்படி பேசினார்.
நீங்கள் உங்கள் வட்டார மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அதற்கு நீங்கள் ஓவ்வொரு வீடாக தேடிச் சென்று குறைகளை தீர்ப்பது உங்கள் கடமையாகும். இங்கு அரசியலுக்கு யார் வந்தாலும் மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதே நமது பணியாகும்.மக்கள் நம்மை தேடி வரும் வரை நாம் காத்திருக்க முடியாது. மக்களை தேடி நாம் தான் செல்ல வேண்டும். சைக்கிளில் வந்து பென்ஸ் காரில் செல்ல விரும்புபவர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்.இந்த அரசியல் பணி,பணம் சம்பாதிப்பதற்கான பணியல்ல மக்களுக்கு சேவை செய்வதற்கான பணியாகும் என்றார்.
English Summary
its not a right place to come in cycle and go with car