முறிந்த தலையை.. மீண்டும் ஒட்டவைத்த அதிசயம்.. மருத்துவர்களே வியந்து போன சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சைக்கிள் ஓட்டுகின்ற போது கார் மோதிய விபத்தில் சிறுவனின் தலை மீண்டும் கழுத்தில் பொருத்தப்பட்டதாக இஸ்ரேல் ஊடகத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

சுலைமான் ஹாசன் என்ற அந்த சிறுவனுக்கு கார் விபத்திற்கு பின் முதுகுத்தண்டின் முதுகெலும்பிலிருந்து மண்டை ஓடு பிரிந்துள்ளது. இந்த விபத்திற்கு பின் சிறுவன் ஹடாசா மருத்துவ மையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். அவருடைய தலை கழுத்தில் இருந்து பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சிறுவனை காப்பாற்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாக கூறியுள்ளார். சிறுவன் உயிர் பிழைக்க 50 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக கூறி அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். 

இந்த அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் உயிர் பிழைத்து இருப்பது அதிசயமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பின் எந்த உதவியும் இல்லாமல் சிறுவன் சாதாரணமாக நடப்பது சாதாரண விஷயம் இல்லை என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isral accident boy surgery makes shock to doctors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->