வழிப்பாட்டுத் தலத்தை தகர்க்கச் சதி: ஐ.எஸ். தீவிரவாதி கைது
IS Agent Arrested In Ohio
ஐ.எஸ். அமைப்பிற்காக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது.
அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தின், டோலிடா நகரில் அமைந்துள்ள யூத வழிபாட்டுத் தலத்தின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபோவதாகச் சதி செய்ததது கண்டறியப்பட்டுள்ளது.
ஓஹையோ மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது அமெரிக்க வாலிபர் டேமன் ஜோசப் என்ற இளைஞர் ஐ. எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் அந்த இயக்கத்தின் கொள்கைகளில் கவரப்பட்டு அந்த இயக்கத்தில் சேர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். அந்த அமைப்பு ஓஹையோவில் உள்ள யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் நடத்த இவருக்கு உத்தரவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்காக நீண்டகாலமாக இவர் முயற்சித்து வந்துள்ளது குறுப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் நடைபெற்று இருந்தால் மிகுந்த உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய எப்.பி.ஐ ஏஜெண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்த தேடுதல் வேட்டையில், டேமன் ஜோசப் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மறைமுகமாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வந்ததை அடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர் இரண்டு யூத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த இருந்ததை ஒத்துக்கொண்டார். அவரிடம் இருந்து 2 கைதுப்பாகிகள் கைப்பற்றப்பட்டன.
English Summary
IS Agent Arrested In Ohio