மோதி 'தடம் புரண்ட ரெயில்கள்': 3 பேர் பலி! மீட்பு  பணிகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியா முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தோனேஷியா கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரயில் எதிரே வந்த பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. 

இந்த கொடூர விபத்தினால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia trains collide 3 killing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->