பல நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு நேர்ந்த உச்சகட்ட அவமானம்! என்ன செய்வார் மோடி!
பல நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு நேர்ந்த உச்சகட்ட அவமானம்! மோடி அரசு நடவடிக்கை கோரிக்கை!
காமன்வெல்த் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி லண்டன் சென்று இருந்தார். அங்கு அவரை எதிர்த்து காலிஸ்தான் ஆதரவாளர்கள், 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த அவர்கள் அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கி சிலர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதை படம் பிடித்த இந்திய தொலைக்காட்சி நிருபரை ஆர்பாட்டக்காரர்கள் தாக்கினர். அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர்.
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி பேசுகையில், “தேசியக்கொடி கிழிக்கப்பட்ட சம்பவம் எங்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவத்திற்காக உயர்மட்ட அளவில் இங்கிலாந்து அரசு மன்னிப்பு தெரிவித்து உள்ளது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்திய தேசியக்கொடி மாற்றப்பட்டது. இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
English Summary
indian flag damged by protestrs