மகாபாரத காவியத்தில் கிருஷ்ணர் இறந்ததை போல வேடனால் பரிதாபக உயிரிழந்த சிறுவன்.!! குடும்பத்தை காப்பாற்றி வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் இருக்கும் பான் ப்ரேக் தாக்ரோ பகுதியை சார்ந்தவர் சாலர்மாய் ஜொப்ரதா (வயது 9). இந்த சிறுவன் கடந்த 10 தேதியன்று வீட்டில் இருந்து சென்ற நிலையில் மயமாகியுள்ளான். சிறுவனை தேடி அலைந்த பெற்றோர்., சிறுவனை எங்கு தேடியும் காணாததால் காவல் நிலையத்தில் விஷயம் குறித்து புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., கடந்த புதன்கிழமையன்று சிறுவனின் உடலை பெரிய பாறையால் மூடி மறைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து கண்டெடுத்தனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு இருந்ததை பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிந்துள்ளனர். 

இதனையடுத்து உள்ளூர் வாசியான பிரமுக் கோசின் (வயது 38)., என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மிருகங்களை வேட்டையாடும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தன்று வேட்டையாடுவதற்கு காட்டு பகுதிக்கு சென்றுள்ள அவர்., மரத்தின் கிளை அசைவதை கண்டு பறவை என்று நினைத்து சுட்டுள்ளார். 

அந்த சமயத்தில் மரத்தின் மீது இருந்த சிறுவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பறவை என்று நினைத்து சிறுவனை சுட்டுவிட்டோம் என்று நினைத்து., அதே பகுதியில் குழியை தோண்டி சிறுவனின் உடலை புதைத்துள்ளார். இந்த விஷமானது விசாரணையில் வெளிவந்த நிலையில்., சிறுவன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சிறு வயதிலேயே குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thailand a child killed by hunter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->