திடீரென உலாவும் ஏலியன்கள்.! அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள்., புதருக்குள் இருந்து வந்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!!
in srilanka aliens attack a girl
இலங்கை நாட்டில் இருக்கும் அடுக்கம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும்., அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். அங்குள்ள கருணாதிலக் என்ற விவசாயி தனது தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களுக்கு காவலாக கடந்த பிப். 2 ம் தேதியன்று வயல்வெளிக்கு சென்ற நேரத்தில்., அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்துள்ளார்.
அந்த நேரத்தில்., சுமார் இரண்டு அடி உயரமுள்ள., நீளமான தலைமுடிகளுடன்., சிவப்பு நிறத்துடன் கூடிய முகம் மற்றும் உதடுகள் காணப்பட்டது. அதனை பார்த்து யார் நீ என்று கேட்டதற்கு., அங்கிருந்து செல்ல சொன்னதற்கும் எந்த விதமான பதிலையும் தெரிவிக்காமல்., என்னையே உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது. இதனால் பதறிய நான் அங்கிருந்து கிராமத்திற்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதற்குள் அங்கிருந்து அந்த மர்மநபர் சென்றுவிட்டது.
மேலும்., அங்குள்ள காலடி தடங்கல் அனைத்தும் அந்த வினோதமான ஏலியனை ஒத்து இருந்தது என்று தெரிவித்தார். மேலும்., அடிக்கடி பறக்கும் தட்டுகள் போன்று சில விநோதங்கள் நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அல்லது வானியல் ஆராய்ச்சி மையங்களில் இருந்து எந்த விதமான பதிலோ அல்லது விளக்கமோ தற்போது வரை வெளியிடப்படாத நிலையில்., மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது.
இலங்கையில் உள்ள அனுராதபுர - மஹவிலச்சிய பகுதியை சார்ந்த பெண்கள் நேற்றைய சமயத்தில்., மர்மமான குள்ள உயிரினம் ஒன்று இரண்டடி உயரத்தில் இருந்ததாகவும்., புதருக்குள் மறைந்திருந்த உயிரினம் திடீரென வந்து தாக்கி சென்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில்., விவசாய நிலத்தின் பகுதிகளில் மர்ம உயிரினம் சில நேரம் வந்து செல்லவதாகவும்., அதற்கான காலடி தடங்கள் தெரிவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
in srilanka aliens attack a girl