விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in srilanka a girl rapped by hotel owner
இலங்கையில் உள்ள திரிகோணமலையில் உப்புவெலி என்னும் சுற்றுலாத்தலமானது உள்ளது. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதெற்கென பிரத்தியேக விடுதிகள் அதிகமாக இருக்கும்.
இங்குள்ள விடுதியில் சுற்றுலாவுக்காக வந்த ஸ்பெயின் நாட்டை சார்ந்த 20 வயதுடைய இளம்பெண் தங்கியுள்ளார். இவர் தங்கியிருந்த விடுதியில் இருக்கும் விடுதியின் உரிமையாளர் விடுதியில் இவரின் அறையில் யாரும் இல்லாததை அறிந்து சென்றுள்ளார்.
இவரை கண்டு பதறிய பெண் வெளியே செல்லுமாறு கூறவே., அவரை பலவந்தப்படுத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாது போல தனது பணியை கவனிக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., சுற்றுலாவிற்கு வந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in srilanka a girl rapped by hotel owner