சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்.! 29 பயணிகள் உடல் நசுங்கி பரிதாப பலியான சோகம்.!!
in Portugal tourist bus getting accident 29 peoples died
இந்த உலகத்தில் பல இடத்தில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்வுகளை அறியும் நாம் அதற்கான கருத்துக்களை தெரிவித்தும்., சோகத்தை பகிர்ந்தும் வருகிறோம்.
இந்த உலகில் உள்ள பல்வேறு இடங்களில் வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது., எதோ ஒரு இடத்தில் ஏற்படும் விபத்துகளால் பலர் தங்களின் உயிரை இழந்தும்., உடல் உறுப்புகளை இழந்தும் வருகின்றனர்.
அந்த வகையில்., ஐரோப்பிய நாட்டில் உள்ள போர்ச்சுகல்லில் இருக்கும் மடெய்ரா தீவுப்பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்குள்ள கடற்கரை நகரிற்கு ஜெர்மனியை சார்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்தில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்த சமயத்தில்., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 18 பெண்கள் உட்பட 29 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த சுமார் 27 பயணிகள் உயிருக்கு போராடி அலறி துடிப்பதை கண்ட வாகனஓட்டிகள்., இது குறித்து மீட்பு படையினர்., காவல் மற்றும் அவசர ஊர்தியினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
in Portugal tourist bus getting accident 29 peoples died