குழந்தையை பெற்றெடுக்கும் வரை பலவந்தப்படுத்தி பாலியல் துன்புறுத்தல்.! அடிமைகளாக மலிவு விலை பெண்கள்., மூடி மறைத்த அதிகாரிகள்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஆசியாவில் உள்ள நாடான மியான்மரில் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக மனித உரிமைகள் ஆணையத்திற்கு குற்றசாட்டு கிடைத்தது. இந்த குற்றசாட்டை கவனித்த மனித உரிமைகள் ஆணையமானது இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு அறிக்கையை தெரிவித்துள்ளது. இளம் வயதிலேயே பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் அவலம் குறித்த அறிக்கையை விடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மியான்மர் நாட்டில் இருக்கும் சமுதாயமான கச்சின் சமுதாயம்., அந்நாட்டில் சிறுபான்மை சமுதாயமாகும். இந்த சமூகத்தை சார்ந்த பெண் குழந்தைகள் விலை கொடுக்கப்பட்டு சீனர்களால் வாங்கப்பட்டதும்., பின்னர் பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டு வாழ்வில் பல இன்னல்களை இன்று வரை அனுபவித்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சீனாவில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை சீன எல்லைக்குள் அழைத்து சென்ற பின்னர்., அங்குள்ள ஆண்களிடம் பரிதாபமாக சிக்கி பெரும் தொகைக்கு விற்பனை செய்து பாலியல் அடிமைகளாக மாற்றியுள்ளனர்.  மேலும்., குழந்தைகளை பெற்றெடுக்க சொல்லி தினமும் பலவந்தமாக பல முறைகள் பாலியல் துன்புறுத்தலுக்கும்., தீராத வலிகளுக்கும் உள்ளாகியுள்ளனர். 

அவ்வாறு அடிமையாகும் பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அந்த பெண்ணை விலைக்கு வாங்கிய நபர் அவருக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறார். அதில் ஒன்று அவரின் குழந்தையை கணவரிடம் வழங்கிவிட்டு சொந்த நாட்டிற்கே செல்வது என்றும் மற்றொரு வாய்ப்பாக வாழ்நாள் அடிமையாக நடத்தப்படுகின்றனர். இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் இதற்கான காரணத்தை அறிய தொடங்கிய முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில்., சீனாவில் கடந்த 1987 ம் வருடத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்., திருமணத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி., மியான்மர் நாட்டில் இருக்கும் கச்சின் சமூகத்தை சார்ந்த மக்களை பாலியல் அடிமைகளாக மாற்றியுள்ளனர். 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அதிகாரிகளின் மறைமுகமான அனுமதியுடன் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில்., பெண்ணின் உறவினர்களும் நண்பர்களும் பணத்திற்க்காக பெண்களை ஏமாற்றி சீனாவிற்கு அழைத்து சென்று., பின்னர் அவர்கள் பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Myanmar girls are kidnapped and rapped for babies by Chinese men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->