நோயாளியுடன் உல்லாசமாக இருந்த பெண் மருத்துவர்.! இறுதியில் நொந்துபோய் செத்துப்போன சோகம்.!! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்., புற்றுநோய் மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் தீபா சுந்தரலிங்கம். இவர் பணியாற்றி வரும் மருத்துவமனையில்., புற்றுநோய் சிகிச்சைக்காக ஒரு நபர் கடந்த ஜனவரி மாதத்தில் 2016 ம் வருடம் அனுமதியாகியுள்ளார். 

சிகிச்சை பெற்று வந்த அந்த நபருடன்., இரவு மது அருந்திவிட்டு பணிக்கும் வரும் தீபா., அந்த நோயாளியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தினமும் பணிக்கு வரும் நேரங்களில் எல்லாம் தொடர்ந்து மது போதையில் தனது லீலைகளை அரங்கேற்றியுள்ளார். 

இதன் மூலமாக அவரது அலைபேசி எண் மற்றும் இணையதள இணைப்பை பகிர்ந்து கொண்ட அவர்., நோயாளியின் இல்லத்திற்கும் சென்று தொடர்ந்து நெருக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும்., இந்த விசயமானது வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்றும் கூறியுள்ளார். 

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர்., ஒரு சமயத்திற்கு மேலாக பொறுமையை இழந்து விஷயம் குறித்து புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் இவரது குற்றம் உறுதிசெய்யப்பட்டது. மேலும்., இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த போது., மருத்துவ துறையில் பணியாற்றும் நீங்கள் நோயாளிக்கு சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். 

உங்களது சுய லாபத்திற்கு அவருடன் உல்லாசமாக இருந்தது எந்த விதத்தில் நல்லதாக உள்ளது., உங்களின் துறைக்கே நீங்கள் ஏமாற்றிவிட்டேர்கள் என்று கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும்., இந்த குற்ற செயலுக்கு 22 ஆயிரம் டாலர்கள் அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Canada a doctor miss used her patient by sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->