விபரீத ஆசையால்., ஆடையின்றி காரில் பயணித்த மூன்று பெண்களுக்கு காத்திருந்த ஆபத்தால் ஏற்பட்ட சோகம்.!!  - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகை சுற்றி பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்., நடைபெறும் சம்பவங்கள் சில பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும்., சில நகைசுவையிலும் முடிவது உண்டு. அவ்வாறு நடைபெறும் சம்பவங்களில் சில வியப்பில் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சில திகைப்பில் ஏற்படும் வண்ணம் இருக்கும். அதனை போன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. 

அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள சாலையில் கார் ஒன்று., விதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் சென்றுள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக அந்த வாகனத்தை பின் தொடர துவங்கினர். 

காவல் துறையினர் தனது துரத்தல் வேட்டையில் பல முறை அந்த காரை நிறுத்தக்கூறி பல முறை எச்சரித்தும் அவர்கள் காரை நிறுத்தாமல் அதிவேகத்திலேயே சென்றுள்ளனர். இந்த துரத்தல் சம்பவமானது சுமார் 33 கி.மீ தொடர்ந்ததை அடுத்து., அவர்களின் காரை மடக்கிப்பிடித்தனர். 

துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்வதற்கு காரின் அருகே விரைந்த காவல் துறையினருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. காரில் பயணித்த மூன்று பெண்கள் உடலில் எந்த விதமான  ஆடையும் அணியாமல் வாகனத்தை இயக்கி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர்., அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மூவரும் குளித்து விட்டு ஏர் டிரை மேற்கொள்வதற்க்காக ஆடையின்றி காரில் அதிவேகத்தில் பயணம் செய்தது தெரியவந்தது. இந்த பதிலை கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போன காவல் துறையினர்., அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america a three lady drive without dress in car police shocked and arrest by chasing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->