அவ பாலியல் தொழிலாளி, என்னை ஏமாத்திட்டா.! துடிதுடிக்க கர்ப்பிணி மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்.!
அவ பாலியல் தொழிலாளி, என்னை ஏமாத்திட்டா.! கர்ப்பிணி மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்.!
சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெயசீலன். இவரது மனைவி மயூரி கிருஷ்ணகுமார்.இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயது குழந்தை ஒன்று உள்ளது. மேலும் மயூரி மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வந்துள்ளது.மேலும் ஜெயசீலன் தனது மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், .முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவனின் கொடுமை தாங்க முடியாத மயூரி,வீட்டை விட்டு வெளியேறி வேறு வழியில்லாமல் பாலியல் தொழில் செய்துவரும், தனது தோழிகளுடன் தங்கி வந்துள்ளார்.மேலும் மயூரி சாலையில் நின்று தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அதனைபார்த்த ஜெயசீலன், தனது மனைவி பாலியல் தொழில் செய்து வருவதாகவும், அந்த நபர் வாடிக்கையாளர் என்றும் எண்ணி, தனது மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்,
பின்னர் மயூரி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.
இதையடுத்து கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்திய ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
husband try to kill wife for doubt on her