அடபாவிகளா.. காசுக்காக 5 மாதங்கள் குழந்தையை வைத்து மருத்துவமனை பார்த்த வேலை, எங்கே தெரியுமா..?
பிரசவத்திற்குசெலவான பில் தொகையை தருவதற்கு பணம் இல்லாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்கள் அம்மாவிடம் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள ஹாஸ்பிட்டல் ஒன்றில் சோனியா என்ற கர்ப்பிணி டெலிவரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ..அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்தக் குழந்தை பிறந்த 35 நாட்கள் இன்குபேட்டரில் இருந்தது, டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக கூறியுள்ளது..
அந்த தொகை இல்லாததால் சோனியாவிடம் இருந்து குழந்தையை ஹாஸ்பிட்டல் நிர்வாகம் பிரித்து வைத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு மீடியாக்கள் செய்தி பரப்பின.
இதையடுத்து சோசியல் நெட்வொர்கிலும் பணத்தை திரட்டி அந்த தாய்க்காக ஹாஸ்பிட்டலில் பில் கட்டினர் பலர் ஒருவழியாக 5 மாதங்கள் கழித்து தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
பின் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கைது செய்யப்பட்டார்..
இதைதொடர்ந்து சோனியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கைது செய்யப்பட்ட தலைமை மருத்துவரை காவல்துறை விடுதலை செய்தனர்.
English Summary
hospital administration money cheating in africa