ஒத்த செல்பியால் துண்டு துண்டாக சிதறி உயிரிழந்த சிறுமி! கதறி துடிதுடித்து போன நண்பன்!!
girl dead while take selfie in railtrack
ரஷ்யாவில் ஓர்ஸ்க் நகரில் வசித்து வந்தவர் கரீனா பேமுக்குபெட்டோவா. 15 வயது நிறைந்த அவர் தன்னுடைய தோழன் ஒருவருடன் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்பொழுது ரயில் தண்டவாளத்தின் மீது இருவரும் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்நிலையில் தண்டவாளத்தில் வேகமாக சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டுள்ளது இதனை கண்டு பயந்த அந்த இளைஞன் கரீனாவை சென்று விடலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளான்.ஆனால் கரீனா பயப்படாதே,ரயில் முன் செல்பி எடுப்போம். வாழ்க்கையில் இதெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார்
ஆனால் ரயில் வருவதை கண்டு பயந்த அந்த இளைஞன் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியுள்ளார். ஆனால் செல்பி எடுக்க நின்று கொண்டிருந்த பெண் ரயிலில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் இது ஆபத்தான பகுதி, தண்டவாளத்தில் சிறுவர்கள் இளைஞர்கள் யாரும் செல்லக்கூடாது என எவ்வளவோ தடவை எச்சரித்தும் செல்பி எடுக்கும் மோகத்தில் தங்களது உயிரையே விட்டுவிடுகின்றனர். தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும் செல்ஃபிக்கு அடிமையாக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary
girl dead while take selfie in railtrack