விமானம் ஓட்டும்போது தூங்கிய விமான பைலட்! அதிர்ச்சியடைந்த பயணி!
விமானம் ஓட்டும்போது தூங்கிய விமான பைலட்! அதிர்ச்சியடைந்த பயணி!
ஆஸ்திரேயாவின் அருகே தாஸ்மானியா என்ற தீவு ஒன்று உள்ளது. இங்குள்ள டோவோன் போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ள தீவுக்கு ஹென்றி என்பவர் தனி விமானத்தில் சென்றுள்ளார். இந்த விமானம் பைபர் பா-31 ரக சிறிய விமானம் ஆகும். இந்த விமானத்தில் அவர் ஒருவர் மட்டுமே விமானத்தை இயக்கி பயணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது அவருக்கு லேசாக தூக்கம் வந்தது. இதனால் விமானம் ஓட்டும்போது, அவர் இருக்கையிலே தூங்கி விட்டார். பின்னர் தூக்கம் தெளிந்து சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது, அந்த விமானம் அவர் தரை இறங்கும் இடத்தை தாண்டி 46 கி.மீ. தூரம் சென்று விட்டது.
பின்னர் அவர், விமானத்தை உடனடியாக திருப்பி கிங் தீவை அடைந்தார். அங்கு இருந்த ஆஸ்திரேலியா விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் அந்த நபரிடம் விளக்கம் கேட்டு அனுமதித்தது. இதற்கு முன்னர் இந்த விமானத்தில் பயணம் சென்று கொண்டிருக்கும்போது, பயணம் செய்த 5 பேரும் இறந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
English Summary
Flight Pilot Shocked traveler!