பிலிப்பைன்ஸில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு.!!

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு நாடு பிலிப்பைன்ஸ். இந்த நாட்டில் அரசுக்கு எதிராக "புதிய மக்கள் ராணுவம்" என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவ அமைப்பினருக்கும், அரசாங்கத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெறுவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராணுவ வீரர்கள் அங்கு சென்று கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்தத் தாக்குதலில் ஐந்து கிளர்ச்சியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராணுவத்தினர் சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for army mans attack in philippines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->