காதலித்து தப்பா..?! இப்படி குடும்பத்தோடு சேர்ந்து...!! அடியோடு புடிங்கிட்டீங்களே..!!! - Seithipunal
Seithipunal


மகன் காதலித்ததற்காக கண்ணை தோண்டி எடுத்த தந்தை.. பாகிஸ்தானில் பரபரப்பு..!!


நம் இந்தியாவில் பெண் பிள்ளைகள் காதலித்தால் தான் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள், ஆனால், பாகிஸ்தானில் நாட்டின், பலோசிஸ்தானில் உள்ள நசிராபாத் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் பகி [22] அந்த பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று, தன் தந்தையிடம் சென்று, தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளை திருமணம் செய்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் தந்தையும், அப்துல் பகியின் நன்கு தங்கைகளும் ஆத்திரத்தில் அப்துல் பகியை அடித்து துன்புறுத்தினர். 

அதோடு நிறுத்தாமல், அப்துல் பகியின் இரு கண்களையும் கரண்டி மூலம் குத்தி எடுத்துள்ளனர். இதனால் வழியில் அப்துல் பகி கத்தி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அப்துல் பகியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விடயம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பவே, செய்தியாளர்கள் அப்துல் பகியை சந்தித்து ஆறுதல் கூறி நடந்தவற்றை கேட்டு அறிந்தனர். அப்துல் பகி இந்த சம்பவம் பற்றி கூறுகையில், நான் காதலிப்பது தவறு என, என் தந்தை என் இரு கண்களையும் தோண்டி எடுத்து, என்னை கொலை செய்ய முயற்சித்தனர். என்னால் தற்போது எதையும் பார்க்க முடியவில்லை. என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FATHER TRYING TO KILL HIS OWN SON FOR LOVE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->