கர்ப்பிணியாக இருந்த போதே கசக்கி பிழிந்த காமுகர்கள்.. கருவில் இருந்த குழந்தைக்கு என்ன ஆனது..? கண்ணீர் விடும் கணவர்..!! - Seithipunal
Seithipunal


கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை திருமணம் செய்திருந்தார்.

இவர்கள் கடந்த 2012–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அப்போது கெயித்லான் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். இடையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர்.

தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானில் கடத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டனர்.

கடத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தில் தனது மனைவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டு தனது சொந்த நாடான கனடா வந்த நிலையில், டொராண்டோ பியார்சன் விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் பொழுது, தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சிசு  உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

அமெரிக்க புலானாய்வு அமைப்பு தந்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An American woman, her Canadian husband and their three children have been freed, nearly five years after being taken hostage by the Taliban-affiliated Haqqani Network in Afghanistan.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->