இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் பாலுவில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 4.06 மணியளவில் இந்தோனேசியாவின் பாலுவில் இருந்து 256 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இதற்கு முன்பாக ஜூன் 20 அன்று, இந்தோனேசியாவில் உள்ள கெபுலாவான் பட்டு என்ற இடத்தில் 5.5 ரிக்டர் அளவில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் படாங்கிற்கு மேற்கே 194 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 4 point 7 magnitude jolts Indonesia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->