பிலிப்பைன்ஸில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.!
Earthquake in philippines 7.1 rictor measurement
பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே ஓடியுள்ளனர். மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வால் கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்தன என்று போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Earthquake in philippines 7.1 rictor measurement