#Breaking திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
earthquake in nicobar
அந்தமான் - நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில வினாடிகள் நீடித்த இந்நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.